28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorized

பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற இளைஞர்கள். தீவிர விசாரணையில் பொலிஸார்.

வண்ணாங்குளம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணை வீதியில் தாக்கிவிட்டு கழுத்தில் இருந்த  தங்க சங்கிலியினை அறுத்துச்சென்ற  சம்பவம் ஒன்று நேற்று (14.08.2024) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு வண்ணாங்குளம்  கிராமத்தில் இருந்து 

உண்ணாப்பிலவு வைத்தியசாலைக்கு மாதாந்த சிகிச்சைக்கு சென்ற வயோதிப பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த 25, 24 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுண் தங்கசங்கிலியினை அறுத்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

தபால்மூல வாக்களிப்பு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

User1

சிலாபத்தில் பீடி இலை பொதிகளுடன் இருவர் கைது

User1

24 மணித்தியாலத்தில் 11 சிறுமியருக்கு நேர்ந்த கதி!

User1

Leave a Comment