28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

2024 ஆம் ஆண்டு பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள் அனைத்தும் எதிர்வரும் ஓகஸ்ட் 16ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை நிறைவு பெறவுள்ளது. 

இதன்படி, பாடசாலைகளின் மூன்றாவது தவணைக்கான முதல் கட்டம் ஓகஸ்ட் 26ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

மேலும், ஓகஸ்ட் 16ஆம் திகதியுடன் 2ஆம் தவணை முடிவடைவதை தொடர்ந்து 3ஆம் தவணைக்கான ஆரம்பம் வரை மாணவர்களுக்கான  2ஆம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

Related posts

மற்றுமொரு கோர விபத்து-இளைஞன் பலி..!

sumi

மக்களின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் – இயக்குனர் செல்வமணி.!

sumi

மன்னார் நானாட்டானில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து- இளம் தாய் காயம்.

sumi

Leave a Comment