27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

இலங்கை வீரர் தகுதி நீக்கம் : விதிமீறல் குற்றச்சாட்டு

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் விதிமீறல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அவர், போட்டியை 44.75 செக்கன்களில் ஓடி முடித்து 5ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், மூன்று அரை இறுதிப் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அருண தர்ஷன TR 17.2.3 என்ற தடகள விதியை மீறும் வகையில் மற்றைய தடத்தில் கால் பதித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்படி மூன்று அரை இறுதிப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 6 வீரர்களும் அடுத்த அதிசிறந்த நேரங்களைப் பதிவுசெய்த இருவருமாக 8 வீரர்கள் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளனர்.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் குவின்சி ஹோல் (43.95 செக்.), ட்ரினிடாட் அண்ட் டுபாகோ வீரர் ஜெரீம் ரிச்சர்ட்ஸ் (44.33 செக்.) ஆகியோரும், 2ஆவது அரை இறுதிப் போட்டியில் க்ரெனெடா வீரர் கிரானி ஜேம்ஸ் (43.78 செக்), ஸம்பியா வீரர் முஸாலாக சாமுகொங்கா (43.81 செக்.) ஆகியோரும், கடைசி தகுதிகாண் போட்டியில் பிரித்தானிய வீரர் மெத்யூ ஹட்சன் – ஸ்மித் (44.07 செக்.), அமெரிக்க வீரர் மைக்கல் நோர்மன் (44.26 செக்.) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றனர்.

அவர்களுடன் ஒட்டுமொத்த நிலையில் அடுத்த அதிசிறந்த நேரப் பெறுதிகளைப் பதிவுசெய்த அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் பெய்லி (44.31 செக்.), நைஜீரிய வீரர் சாமுவேல் ஒகாஸி (44.41 செக்.) ஆகியோரும் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

Related posts

முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப் பற்று அபிவிருத்தி கூட்டம்..! {படங்கள்}

sumi

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா

User1

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி !

User1

Leave a Comment