28.2 C
Jaffna
September 8, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

தந்தை, மகன் தகராறு – காதும், விரல்களும் துண்டாடப்பட்டன.!

தந்தைக்கும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், தந்தையின் காதுகளில் ஒன்று துண்டாகியதுடன், மகனின் கை விரல்களில் இரண்டு விரல்கள் துண்டாகின. இந்த சம்பவம் பல்லம, வில்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பல்லம, வில்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் பின்னர் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையிலேயே தந்தையின் காது அறுபட்டுள்ளதாகவும், தந்தையின் தாக்குதலில் மகனின் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதாகவும் பல்லம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வில்பொத்த பகுதியிலுள்ள வீடொன்றில் விருந்துபசாரம் முடித்து வீடு திரும்பிய 56 வயதுடைய தந்தை உறங்கிக் கொண்டிருந்த போது மகன் தடியால் தாக்கியதாகவும் தந்தையின் ஒரு காது துண்டாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் கண்விழித்த தந்தை, கைக்கு கிடைத்த கத்தியால் மகனைத் தாக்கினார், மகன் தாக்குதலைத் தவிர்க்க முயன்றபோது அவரது இரண்டு விரல்கள் வெட்டப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.

Related posts

16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில்…! : வாக்களிக்க எத்தனைப் பேர் இலங்கை வருவர்? 

User1

கொழும்பு – மருதானையில் தடம்புரண்ட ரயில்

User1

நல்லைக் கந்தனின் சூர்யோதய திருவிழா!

User1