28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

10 வருடமாக ஒளிந்திருந்தவர் கைது

நீதிமன்றத்தை தவிர்த்து 10 வருடங்களாக தலைமறைவாக இருந்த சந்தேகநபர் ஒருவர் மாவனெல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவி ஒருவரை பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜராகாமல் நீதிமன்றத்தை தவிர்த்திருந்தார்.
Nortonbridge, Teburton தோட்டத்தில் வசிக்கும் 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தாம் வாழ்ந்த தோட்டத்தில் 11 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு தயாராக இருந்தார்.
ஆனால் அப்போது சந்தேகநபர் அப்பகுதியை விட்டு ஓடி சென்று தீவின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மாவனெல்ல பிரதேசத்தில் மாறுவேடமிட்டு பட்டாணி விற்பனை செய்வதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் புலனாய்வு பிரிவு மற்றும் நோட்டன்புஷ் பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர், ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிபுன தெஹிகம மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களின் பணிப்புரைக்கு அமைய, சந்தேகநபர் மாவனெல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Related posts

கட்டைக்காட்டில் இராணுவத்தினர் சிரமதானம்.!

sumi

யாழ் உரும்பிராயில் 80 கிலோ கஞ்சா வைத்திருந்த காவாலி!!

sumi

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா

User1