28.2 C
Jaffna
September 8, 2024
Uncategorizedஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

இந்திய இலங்கை உறவுக்கு சீனா தடையல்ல.!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த சீனா ஒருபோதும் முற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது நாட்டிற்கு வழங்கிய பொருளாதார ஆதரவுக்காகவும் அவர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு வழங்கியது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பேர்த் நகரில் நடைபெறும் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

இதன்போது வியோன் (WION) செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலே‍யே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

Related posts

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்!

User1

பூநகரி மக்களை சந்தித்தார் சிறீதரன் எம்.பி.!!

User1

4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் படுகாயம்

User1