28.2 C
Jaffna
September 8, 2024
மலையக செய்திகள்

மஸ்கெலியாவில் போதைப்பொருள் நிகழ்வு

சிறிலங்காவின் சுதந்திரதினமான நேற்று, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நேற்று மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.
IMG 20240204 111232

மஸ்கெலியா வலய பொலிஸ் பிரிவில் உள்ள ஏ.ஸ்.பி.ஜயசிங்க தலைமையில், மஸ்கெலியா நகரில் உள்ள பி.எம்.டி.கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்த
நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார , பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் , பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
IMG 20240204 112501

நிகழ்வில் உரையாற்றிய எஸ்.எஸ்.பி.ஜயசிங்க
“ மிகவும் அமைதியான சூழலில் உள்ள மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
அத்துடன் எமது பகுதியில் உள்ள 21 தமிழ் மற்றும் சிங்களப் பாடசாலைகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் போதை மாத்திரை , வாசனைப்பாக்கு ,புகையிலை மது என்பவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும் . ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் முன் வந்து எமது பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைக்கும் அருகில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் அங்காடிகள் பற்றிய தகவல்கள் எமக்கு வழங்க வேண்டும்” என்று மக்களைக் கேட்டுக்கொண்டார்.

Related posts

1700 ரூபாய் சம்பள விவகாரம்: மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

User1

லிந்துலை பிரதேச வைத்தியசாலை அபாய நிலையில்…..

User1

தோட்ட தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும கொடுப்பனவுகள் !

User1

Leave a Comment