28.2 C
Jaffna
September 8, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் – யாழிலும் முன்னெடுப்பு.!!

இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாள் என குறிப்பிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று, யாழ்ப்பாபத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான போராட்டம், பதாகைகளைத் தாங்கிய ஊர்வலமாக யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலை வந்தடைந்தது.

இதன்போது சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள், அடக்குமுறைக்கு உள்ளாக்கும் சட்ட மூலங்களை நீக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தவாறு கருப்புப் பட்டியணிந்து, கைகளிலே பதாதைகளைத் தாங்கியவாறு கோஷங்களும் எழுப்பப்பட்டன.
IMG 20240204 WA0044 (1)

IMG 20240204 WA0046
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Related posts

மன்னாரில் 10 வயது சிறுமி கொடூர கொலை-வீதிக்கு இறங்கிய மக்கள்..!

sumi

மன்னார் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் குருதிக்கொடை முகாம்.

User1

14 வயது தங்கையை 5 மாத கர்ப்பமாக்கிய அண்ணன்

sumi

Leave a Comment