28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கட்டு துப்பாக்கி வெடித்ததில் போலீஸ் உத்தியோத்தர் ஒருவர்படுகாயம்

தர்மபுரம் போலீஸ் நிலையத்தில் கடமையாட்டும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் கட்டு துப்பாக்கி வெடித்ததில் படுகாயம் அடைந்துள்ளார்.

இன்றைய தினம் ( 01.02.2024 ) தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதிக்கு விரைந்த தருமபுரம் போலீசார் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்ய முற்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஒடியநிலையில் அவரை கைது செய்யும் நோக்கில் பொலிஸ் அதிகாரி ஒருவர் துரத்திச் சென்ற பொது மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுதுவக்கு வெடித்ததில் 37 வயதுடைய போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

நிலையில் படுகாயம் அடைந்த பொலிஸார் தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் அதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்

WhatsApp Image 2024 02 01 at 9.39.56 PM WhatsApp Image 2024 02 01 at 9.39.55 PM (3) WhatsApp Image 2024 02 01 at 9.39.55 PM (2) WhatsApp Image 2024 02 01 at 9.39.55 PM (1) WhatsApp Image 2024 02 01 at 9.39.55 PM

Related posts

மாணிக்கக்கல்லை விற்க முயன்றோர் கைது

sumi

வீசிய கடும் காற்றினால் பொன்னாலையில் பிடுங்கி வீசப்பட்ட வீடு – 3 குடும்பங்கள் பாதிப்பு!

User1

இறுதி தருணத்தில் மாறிய முடிவு! மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கசிந்த தகவல்

User1

Leave a Comment