• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

திருடர் கூட்டத்தின் கூச்சல்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ  அஞ்சப்போவதில்லை!

selvan by selvan
July 2, 2026
in இலங்கை செய்திகள்.
0
திருடர் கூட்டத்தின் கூச்சல்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ  அஞ்சப்போவதில்லை!
Share on FacebookShare on Twitter

கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடி, ஊழல் செய்து, மக்களின் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்த திருடர் கூட்டத்தின் கூச்சல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

இரத்தினபுரி பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மிகக் குறுகிய காலத்தில் நிவாரணங்களை வழங்கி வருகின்றது. வரலாற்று ரீதியாக எந்தவொரு அரசும் இவ்வளவு விரைவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியதில்லை.

பல வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்காத மக்களுக்கு எமது அரசு துரிதமாகச் செயற்பட்டு வருகின்றது. விடுபட்ட ஏனைய மக்களுக்கும் நிவாரணங்களை விரைவாகக் கொண்டு சேர்க்குமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் அரசும் பொய் கூறுவதாக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் முகம் காட்டுவதற்காகவே சிலர் பேசி வருகின்றனர்.

கடந்த காலத்தில் கொள்ளையடித்துவிட்டு தற்போது சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பவர்களே, இன்று எங்களைப் பார்த்துப் பொய் கூறுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் சுங்கத் திணைக்களத்தை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்து இலங்கைக்கு ஆடம்பர வாகனம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளார் என்று ஊடகச் செய்தி ஒன்றைப் பார்த்தேன்.

இவ்வாறானவர்களே இன்று எம்மைக் குறை கூறுகின்றார்கள். அந்த முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மகன் யார் என்பது மிக விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும்.

தற்போது எரிபொருள் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்ட போது, ‘வெறும் 20 ரூபா தானே குறைக்கப்பட்டுள்ளது’ எனச் சிலர் ஏளனமாகப் பேசி வருகின்றனர்.

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் 20 ரூபா என்பது பெரிய தொகையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாட்டின் பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு 20 ரூபா என்பது மிக முக்கியமானதாகும். எனவே, இந்த விலைக்குறைப்பை நாட்டின் சாதாரண மக்கள் வரவேற்கின்றனர்.

இலங்கையில் எந்தவொரு அரசும் ஒருமுறை பொருள்களின் விலையையோ அல்லது எரிபொருள் விலையையோ அதிகரித்தால் அதனை மீண்டும் குறைக்காது என்ற பொதுவான எண்ணமே கடந்த காலத்தில் மக்கள் மத்தியில் இருந்தது. இன்று அந்த எண்ணம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எண்ணெயின் விலை குறையும் போதும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து செல்லும் போதும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைத்து, அந்தப் பயனை மக்களுக்கு நேரடியாக வழங்க முடியும் என்பதை எமது தேசிய மக்கள் சக்தி அரசு நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளது.” – என்றார்.

Related Posts

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசிய திட்டமாக செயல்படுத்த வேண்டும்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசிய திட்டமாக செயல்படுத்த வேண்டும்!

by selvan
July 2, 2026
0

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள்...

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி பறிபோகுமா? – ஆகஸ்ட் 31 ஆம் திகதி விசாரணை!

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி பறிபோகுமா? – ஆகஸ்ட் 31 ஆம் திகதி விசாரணை!

by selvan
July 2, 2026
0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பதவியிலிருப்பதற்கான தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான வாதங்களை விசாரணை செய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும்...

கடவுச்சொற்களை வழங்குமாறு சுரேஷ் சலேயை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது!

கடவுச்சொற்களை வழங்குமாறு சுரேஷ் சலேயை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது!

by selvan
July 2, 2026
0

கைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை சுரேஷ் சலே, வழங்க வேண்டும் என விசாரணை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள்...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் வருண ஜயசுந்தர!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் வருண ஜயசுந்தர!

by selvan
July 2, 2026
0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்ததன் பின்னர், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர அங்கிருந்து புறப்பட்டுச்...

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

by selvan
July 2, 2026
0

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் அதி மேதகு சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நேற்று மாலை 3.30 மணிக்கு நடத்தினார்.இந்த நிகழ்வு கண்டி இந்திய உதவி...

கிளிநொச்சியில் ” எல்நினோ ” காலநிலை தொடர்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தெளிவூட்டல்!

கிளிநொச்சியில் ” எல்நினோ ” காலநிலை தொடர்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தெளிவூட்டல்!

by selvan
July 2, 2026
0

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கமக்காரர் அமைப்புக்கள் மற்றும் மீனவசங்கங்களின் பிரதிநிதிகளுக்கு எல்நினோ தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒழுங்குபடுத்தலில் குறித்த...

வடக்கு கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.!

வடக்கு கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.!

by Mathavi
July 2, 2026
0

வடக்கு கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத் தலைவர் வர்ணகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கூட்டம் ஒன்றை...

பூகோள அரசியல் – இந்தியாவின் நலனை வலியுறுத்தி தீவகத்தில் சீன நிறுவன வருகையை தடுத்தவர் டக்ளஸ்.!

பூகோள அரசியல் – இந்தியாவின் நலனை வலியுறுத்தி தீவகத்தில் சீன நிறுவன வருகையை தடுத்தவர் டக்ளஸ்.!

by Mathavi
July 2, 2026
0

பூகோள அரசியலில் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் வகையிலான திட்டங்களை இடமளிக்க கூடாது என்ற டக்ளஸ் தேவானந்தாவின் உறுதியான நிலைப்பாடு நெடுந்தீவில் பரிணமிக்கும் கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின்...

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா; இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா; இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.!

by Mathavi
July 2, 2026
0

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது.!

by Mathavi
July 2, 2026
0

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்சிஸ்கு பகுதியில் வலானை மத்திய ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி