உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் போல் வேடமிட்டு போதைப்பொருள் கடத்தல்காரனை கைது செய்த பொலிஸார்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

உகண  மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான கடத்தல்காரர், அம்பாறை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

உகண -21, திஸ்ஸபுர கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலேயே இந்தச் சதுரங்க வேட்டை அரங்கேறியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக உகண  பொலிஸ் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே இந்த போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார்.

தனது வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் மற்றும் விசேட விளக்குகளைப் பொருத்தி, பொலிஸாரின் நடமாட்டத்தை அவர் கண்காணித்து வந்துள்ளார்.

பொலிஸார் சோதனையிட வரும்போதெல்லாம், அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட சில ஊழல் அதிகாரிகளிடமிருந்தோ அல்லது வெளியிலுள்ள உளவாளிகளிடமிருந்தோ முன்கூட்டியே தகவல் கிடைத்துவிடுவதால், அவர் தப்பியோடி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அண்மையில் இறக்காமம்  பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் (SI) ஒருவருக்கும், இந்தச் சந்தேக நபருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

உகண பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி லங்காதேவ மற்றும் தற்போதைய பிரதம பொலிஸ் பரிசோதகர் (HQI) சுமித் குணவர்தன ஆகியோர் மேற்கொண்ட முந்தைய சோதனைகள் தோல்வியடைந்ததற்கும் இந்த உள்ளகத் தகவல் கசிவே முக்கியக் காரணமாக இருந்துள்ளது.

தொடர் தோல்விகளைத் அடுத்து, அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சுஜித் வேதமுல்லவின் நேரடித் தலையீட்டின் கீழ் விசேட திட்டமொன்று தீட்டப்பட்டது.

இதற்கமைய, அம்பாறை மாவட்ட  குற்றப் புலனாய்வு பிரிவு   பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், தங்களை ‘டெங்கு ஒழிப்புப் பரிசோதகர்கள்’ போல மாற்றிக்கொண்டனர்.

இக்குழுவில் கர்ப்பிணிப் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்ற பொலிஸ் குழுவினர், டெங்கு நுளம்புப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டின் பின்புறம் மற்றும் சுற்று சூழலை பரிசோதனை செய்தனர்.

இதன்போது சந்தேக நபர் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, அவர்களைத் திசைதிருப்ப முயன்றார்.

எனினும், அந்தப் பகுதியில் மாறுவேடத்தில் மறைந்திருந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் திடீரெனப் பாய்ந்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட வேளையில், சந்தேக நபர் தன்னை விடுவிப்பதற்காக பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்கவிடம் 2 இலட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முனைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், லஞ்சக் கோரிக்கையை நிராகரித்த பொலிஸார், சந்தேக நபரை உடனடியாகப் பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அம்பாறை மாவட்ட  குற்றப் புலனாய்வு  பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 30 மில்லிகிராம் ஏனைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபரை அம்பாறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, நீதவான் திருமதி புஷ்பராஜா ஆனந்தவதனி சந்தேக நபரை 7 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சுஜித் வேதமுல்லவின் வழிகாட்டலில், அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரியந்த பண்டார கஸ்தூரியாரச்சி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இவ்வதிரடி நடவடிக்கையில் பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க, பொலிஸ் பரிசோதகர் எஸ்.பண்டார, பொலிஸ் உத்தியோகத்தர்களான ரஞ்சித் (60052), சந்திரசேன (67764), திஸ்ஸநாயக்க (89795), சுனில் (95062), சஞ்சீவ (91287), அஜித் (102796), பெண் பொலிஸ் உத்தியோகத்தர் செவ்வந்தி (80622), மற்றும் சுதேஷ் (21016), சச்சந்த ஆகியோர் பங்கேற்றனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

41 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0