• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 3, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் போல் வேடமிட்டு போதைப்பொருள் கடத்தல்காரனை கைது செய்த பொலிஸார்!

selvan by selvan
July 1, 2026
in இலங்கை செய்திகள்.
0
டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் போல் வேடமிட்டு போதைப்பொருள் கடத்தல்காரனை கைது செய்த பொலிஸார்!
Share on FacebookShare on Twitter

உகண  மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான கடத்தல்காரர், அம்பாறை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

உகண -21, திஸ்ஸபுர கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலேயே இந்தச் சதுரங்க வேட்டை அரங்கேறியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக உகண  பொலிஸ் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே இந்த போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார்.

தனது வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் மற்றும் விசேட விளக்குகளைப் பொருத்தி, பொலிஸாரின் நடமாட்டத்தை அவர் கண்காணித்து வந்துள்ளார்.

பொலிஸார் சோதனையிட வரும்போதெல்லாம், அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட சில ஊழல் அதிகாரிகளிடமிருந்தோ அல்லது வெளியிலுள்ள உளவாளிகளிடமிருந்தோ முன்கூட்டியே தகவல் கிடைத்துவிடுவதால், அவர் தப்பியோடி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அண்மையில் இறக்காமம்  பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் (SI) ஒருவருக்கும், இந்தச் சந்தேக நபருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

உகண பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி லங்காதேவ மற்றும் தற்போதைய பிரதம பொலிஸ் பரிசோதகர் (HQI) சுமித் குணவர்தன ஆகியோர் மேற்கொண்ட முந்தைய சோதனைகள் தோல்வியடைந்ததற்கும் இந்த உள்ளகத் தகவல் கசிவே முக்கியக் காரணமாக இருந்துள்ளது.

தொடர் தோல்விகளைத் அடுத்து, அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சுஜித் வேதமுல்லவின் நேரடித் தலையீட்டின் கீழ் விசேட திட்டமொன்று தீட்டப்பட்டது.

இதற்கமைய, அம்பாறை மாவட்ட  குற்றப் புலனாய்வு பிரிவு   பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், தங்களை ‘டெங்கு ஒழிப்புப் பரிசோதகர்கள்’ போல மாற்றிக்கொண்டனர்.

இக்குழுவில் கர்ப்பிணிப் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்ற பொலிஸ் குழுவினர், டெங்கு நுளம்புப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டின் பின்புறம் மற்றும் சுற்று சூழலை பரிசோதனை செய்தனர்.

இதன்போது சந்தேக நபர் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, அவர்களைத் திசைதிருப்ப முயன்றார்.

எனினும், அந்தப் பகுதியில் மாறுவேடத்தில் மறைந்திருந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் திடீரெனப் பாய்ந்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட வேளையில், சந்தேக நபர் தன்னை விடுவிப்பதற்காக பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்கவிடம் 2 இலட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முனைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், லஞ்சக் கோரிக்கையை நிராகரித்த பொலிஸார், சந்தேக நபரை உடனடியாகப் பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அம்பாறை மாவட்ட  குற்றப் புலனாய்வு  பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 30 மில்லிகிராம் ஏனைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபரை அம்பாறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, நீதவான் திருமதி புஷ்பராஜா ஆனந்தவதனி சந்தேக நபரை 7 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சுஜித் வேதமுல்லவின் வழிகாட்டலில், அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரியந்த பண்டார கஸ்தூரியாரச்சி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இவ்வதிரடி நடவடிக்கையில் பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க, பொலிஸ் பரிசோதகர் எஸ்.பண்டார, பொலிஸ் உத்தியோகத்தர்களான ரஞ்சித் (60052), சந்திரசேன (67764), திஸ்ஸநாயக்க (89795), சுனில் (95062), சஞ்சீவ (91287), அஜித் (102796), பெண் பொலிஸ் உத்தியோகத்தர் செவ்வந்தி (80622), மற்றும் சுதேஷ் (21016), சச்சந்த ஆகியோர் பங்கேற்றனர். 

Related Posts

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு.!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு.!

by Mathavi
July 3, 2026
0

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர்விநியோகத் தடையானது...

மக்களுக்குப் பொய் மூட்டை; அநுர அரசை கிழித்தெறிந்த ஐக்கிய மக்கள் சக்தி.!

மக்களுக்குப் பொய் மூட்டை; அநுர அரசை கிழித்தெறிந்த ஐக்கிய மக்கள் சக்தி.!

by Mathavi
July 3, 2026
0

அநுர அரசு ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்குப் பாரிய பொய்களைக் கூறி ஏமாற்றியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம் சாட்டினார். எதுல்கோட்டேயிலுள்ள...

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

by selvan
July 2, 2026
0

பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கிளிநொச்சி நகர எல்லைக்குள் உள்ள ஒரு குழு கடை உரிமையாளர்களுக்கு...

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம்!

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம்!

by selvan
July 2, 2026
0

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் ஜனநாயகத்தினை கேள்விக்குள்ளாக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு...

ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

by selvan
July 2, 2026
0

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கிவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் வதிவிடப் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது. நடைபெற்றது. மட்டக்களப்பு சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் ஓசன் ஸ்டார் லங்கா...

மன்னாரில் தொழிலதிபர் முஹமட் பாஹிம் மீது தாக்குதல்-பழக்கடை உரிமையாளர் கைது.

மன்னாரில் தொழிலதிபர் முஹமட் பாஹிம் மீது தாக்குதல்-பழக்கடை உரிமையாளர் கைது.

by selvan
July 2, 2026
0

மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள உணவகத்துடன் கூடிய பழ விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான முஹமட் பாஹீம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம்...

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்

by selvan
July 2, 2026
0

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரை பிரிவின் அனுகாநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர்...

இளம் வயதினரிடையே பாலியல் நோய்கள் அதிகரிப்பு!

இளம் வயதினரிடையே பாலியல் நோய்கள் அதிகரிப்பு!

by selvan
July 2, 2026
0

இளம் வயதினரிடையே பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும்...

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசிய திட்டமாக செயற்படுத்தப்பட வேண்டும்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசிய திட்டமாக செயற்படுத்தப்பட வேண்டும்!

by selvan
July 2, 2026
0

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள்...

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி பறிபோகுமா? – ஆகஸ்ட் 31 ஆம் திகதி விசாரணை!

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி பறிபோகுமா? – ஆகஸ்ட் 31 ஆம் திகதி விசாரணை!

by selvan
July 2, 2026
0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பதவியிலிருப்பதற்கான தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான வாதங்களை விசாரணை செய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி