• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 29, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சுரேஷ் சலே விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்! – முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தல்

selvan by selvan
June 28, 2026
in இலங்கை செய்திகள்.
0
சுரேஷ் சலே விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்! – முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தல்
Share on FacebookShare on Twitter



அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தைத் தங்களின் சுயலாபங்களுக்காகச் சில தரப்பினர் தேவையற்ற அரசியல் பிரச்சினையாகவும் சர்ச்சையாகவும் மாற்றி வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதைய அரசானது நாட்டின் பெரும்பான்மையான சாதாரண உழைக்கும் மக்களின் பரந்த ஆதரவைப் பெற்று ஆட்சிப் பீடமேறிய ஒரு அரசாங்கமாகும். மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட முயற்சிகளை இந்த அரசு தற்போது முன்னெடுத்து வருகின்ற போதிலும், அதன் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் தற்போதே ஒரே வார்த்தையில் எம்மால் சான்றிதழ் வழங்கிவிட முடியாது.

அதேபோன்று, எதிர்காலத்தில் நாட்டில் முற்றிலும் புதியதொரு மூன்றாவது அரசியல் சக்தி உருவாகும் எனத் தாம் நம்பவில்லை. தற்போது களத்தில் உள்ள அரசியல் சக்திகளே தொடர்ந்தும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் பல்வேறு அரசியல் எதிர்பார்ப்புகளுடன் தற்போது தீவிரமாகச் செயற்பட்டு வருகின்ற போதிலும், அவர்களது எதிர்கால அரசியல் பயணத்தில் பெரும் பின்னடைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.

நாட்டில் தற்போதைய சூழலில் சட்டம் பொதுவாக நல்ல முறையிலேயே அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக வெவ்வேறு வழிகளில் சட்டம் அமுல்படுத்தப்படுவதாகப் பொதுவெளியில் கடுமையான குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்ற போதிலும், உண்மையான குற்றவாளிகள், ஊழல்வாதிகள் மற்றும் நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடித்த நாசகார சக்திகளுக்கு எதிராகத் தராதரம் பாராது சட்டத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கம் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தை தற்போது சில அரசியல் தரப்பினர் திட்டமிட்டபடி ஒரு அரசியல் சர்ச்சையாக மாற்றி வருகின்றனர். இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகள் சிலர் தற்போது உயிரிழந்துள்ள போதிலும், அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் எஞ்சிய உறுப்பினர்கள் அல்லது அவர்களுக்கு வெளியில் இருந்து நிதியுதவியும் ஆதரவும் வழங்கியவர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் மீதும் தட்டாமல் சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாய வேண்டும்.

அதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மேற்கொண்டு வரும் உண்ணாநோன்புப் போராட்டம், இறுதி நோக்கில் அவருக்கே பெரும் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்த உத்தியால் அவர் உடலளவில் மேலும் பலவீனமடைந்தால், நீதிமன்றத்தில் தமக்கான சட்டப் போராட்டத்தையும் வழக்கையும் தைரியமாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மன வலிமையையும், உடல் ஆற்றலையும் அவர் முழுமையாக இழக்க நேரிடும்.” – என்றார்.

Related Posts

சஜித் அணியின் உறுப்பினர் ஒருவர்
கூர்மையான ஆயுதத்தால் குத்திப் படுகொலை!

by selvan
June 28, 2026
0

அம்பாந்தோட்டை - வீரகெட்டிய பகுதியில் இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த இளைஞர், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவும், அந்தக்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

டெங்குவினால் 31 பேர் பலி! – 51 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிப்பு!

by selvan
June 28, 2026
0

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 31 பேர் மரணமடைந்துள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.ஜூன் 25 மற்றும் 26ஆம்...

தமது வீதியை விடுவிக்கக் கோரி  கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்னால் பொதுமக்கள்போராட்டம்!

by selvan
June 28, 2026
0

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் தமது கிராமத்திற்குச் செல்லும் வீதியை கிழக்குப் பல்கலைக்கழகம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்களும் பொது அமைப்புகளும் இணைந்து கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால்...

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தில் உலக சாதனை!

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தில் உலக சாதனை!

by selvan
June 28, 2026
0

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வவுனியூர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமியே 6 வயதுக்குட்பட்ட பிரிவில் இந்த...

தொல்புரத்தில் கத்தியால் தாக்கப்பட்ட நபர்  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

தொல்புரத்தில் கத்தியால் தாக்கப்பட்ட நபர்  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

by selvan
June 28, 2026
0

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது ரகு துஷ்யந்தன் (வயது...

இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமை! – அமைச்சர் சரோஜா அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமை! – அமைச்சர் சரோஜா அதிர்ச்சித் தகவல்

by selvan
June 28, 2026
0

இலங்கையின் தற்போதைய மக்கள் தொகையில் ஒவ்வொரு 50 பேரில் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் என்ற திடுக்கிடும் புள்ளிவிவரத்தை மகளிர், சிறுவர் விவகார மற்றும் மனிதப் பலு...

வடக்கு வைத்தியசாலைகளுக்கு விசேட மேலதிக நிதி ஒதுக்கீடு – ஆளுநரின் கோரிக்கைகளை ஏற்றார் சுகாதார அமைச்சர்

by selvan
June 28, 2026
0

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை, சுகாதார மற்றும்...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாகப் பிரச்சினையை ஆராய விசேட குழு

by selvan
June 28, 2026
0

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனான முறையில் முன்னெடுப்பது மற்றும் அங்குள்ள குறைபாடுகளைத் தீர்ப்பது குறித்து ஆராய்வதற்காகச் சுகாதார அமைச்சின் மட்டத்தில் விசேட...

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பலி!

by selvan
June 28, 2026
0

பிலியந்தலை - மகரகம பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர்...

ஐ.நா. விதியின் கீழ் இலங்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! – 9 சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தல்

ஐ.நா. விதியின் கீழ் இலங்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! – 9 சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தல்

by selvan
June 28, 2026
0

சித்திரவதைகள் மற்றும் மனிதத்தன்மையற்ற கொடூரத் தண்டனைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தை ஏற்றுக்கொண்டு, பின்னர் அதன் வரைமுறைகளை மீறிச் செயற்பட்ட இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடன...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி