• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 29, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமை! – அமைச்சர் சரோஜா அதிர்ச்சித் தகவல்

selvan by selvan
June 28, 2026
in இலங்கை செய்திகள்.
0
இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமை! – அமைச்சர் சரோஜா அதிர்ச்சித் தகவல்
Share on FacebookShare on Twitter

இலங்கையின் தற்போதைய மக்கள் தொகையில் ஒவ்வொரு 50 பேரில் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் என்ற திடுக்கிடும் புள்ளிவிவரத்தை மகளிர், சிறுவர் விவகார மற்றும் மனிதப் பலு வலுவூட்டல் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, புனர்வாழ்வு பணியகத்தினால்  கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘முழு நாடும் ஒன்றாக’ என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.

அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

“இன்று எமது நாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக மோசமான முறையில் போதைப்பொருளுக்கு இரையாகி வருகின்றனர். இதன் நேரடி விளைவாக இந்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தாய்மார்களும், பெண்களும் சொல்லொணாத் துயரங்களுக்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர். குடும்பக் கட்டமைப்புகள் சீர்குலைந்து, பிள்ளைகளின் கல்வி முற்றாகப் பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கையே இருண்டு போகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாபெரும் பேரழிவிலிருந்து எமது தாய்நாட்டை மீட்பதற்கு ஒட்டுமொத்த சமூகத்தினதும் பாரிய கூட்டு முயற்சி அவசியமாகும்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகச் சமீபகாலமாகப் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடிக் கைதுகளின் மூலம், அரசியல் பின்னணிகளுக்கும் போதைப்பொருள் குற்றங்களுக்கும் இடையே நிலவி வரும் மிக நெருக்கமான கள்ளத்தொடர்புகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

சட்டத்தின் பிடியில் சிக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை எவ்வித தடையுமின்றிச் சட்டவிரோதமாக விடுவிப்பதற்காக, அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களை ஆயுதங்களைக் காண்பிப்பதற்காக வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறி நாடகமாடி, பின்னர் அவர்களை நீண்டகாலம் தடுத்து வைத்து, இறுதி நேரத்தில் அவர்களைச் சட்டத்திலிருந்து விடுவிப்பதற்காக ஒட்டுமொத்த அரச இயந்திரமே தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அன்று அத்தகையதொரு ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரமே இந்நாட்டில் காணப்பட்டது.

இலங்கையை ஒரு சர்வதேச குற்றவியல் நாடாக மாற்றுவதற்குப் பின்னணியில் இருந்து கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதி முயற்சிகள் தற்போது ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன. இக்குற்றவாளிகள் தங்களின் தராதரங்களைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர். இந்தத் தூய்மைப்படுத்தும் செயற்பாட்டில் தற்போதைய அரசாங்கம் எவ்வித அரசியல் காரணங்களுக்காகவும் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.” – என்றார்.

Related Posts

சஜித் அணியின் உறுப்பினர் ஒருவர்
கூர்மையான ஆயுதத்தால் குத்திப் படுகொலை!

by selvan
June 28, 2026
0

அம்பாந்தோட்டை - வீரகெட்டிய பகுதியில் இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த இளைஞர், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவும், அந்தக்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

டெங்குவினால் 31 பேர் பலி! – 51 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிப்பு!

by selvan
June 28, 2026
0

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 31 பேர் மரணமடைந்துள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.ஜூன் 25 மற்றும் 26ஆம்...

தமது வீதியை விடுவிக்கக் கோரி  கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்னால் பொதுமக்கள்போராட்டம்!

by selvan
June 28, 2026
0

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் தமது கிராமத்திற்குச் செல்லும் வீதியை கிழக்குப் பல்கலைக்கழகம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்களும் பொது அமைப்புகளும் இணைந்து கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால்...

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தில் உலக சாதனை!

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தில் உலக சாதனை!

by selvan
June 28, 2026
0

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வவுனியூர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமியே 6 வயதுக்குட்பட்ட பிரிவில் இந்த...

தொல்புரத்தில் கத்தியால் தாக்கப்பட்ட நபர்  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

தொல்புரத்தில் கத்தியால் தாக்கப்பட்ட நபர்  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

by selvan
June 28, 2026
0

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது ரகு துஷ்யந்தன் (வயது...

சுரேஷ் சலே விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்! – முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தல்

சுரேஷ் சலே விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்! – முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தல்

by selvan
June 28, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தைத் தங்களின் சுயலாபங்களுக்காகச் சில தரப்பினர் தேவையற்ற அரசியல் பிரச்சினையாகவும் சர்ச்சையாகவும் மாற்றி வருகின்றனர் என...

வடக்கு வைத்தியசாலைகளுக்கு விசேட மேலதிக நிதி ஒதுக்கீடு – ஆளுநரின் கோரிக்கைகளை ஏற்றார் சுகாதார அமைச்சர்

by selvan
June 28, 2026
0

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை, சுகாதார மற்றும்...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாகப் பிரச்சினையை ஆராய விசேட குழு

by selvan
June 28, 2026
0

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனான முறையில் முன்னெடுப்பது மற்றும் அங்குள்ள குறைபாடுகளைத் தீர்ப்பது குறித்து ஆராய்வதற்காகச் சுகாதார அமைச்சின் மட்டத்தில் விசேட...

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பலி!

by selvan
June 28, 2026
0

பிலியந்தலை - மகரகம பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர்...

ஐ.நா. விதியின் கீழ் இலங்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! – 9 சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தல்

ஐ.நா. விதியின் கீழ் இலங்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! – 9 சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தல்

by selvan
June 28, 2026
0

சித்திரவதைகள் மற்றும் மனிதத்தன்மையற்ற கொடூரத் தண்டனைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தை ஏற்றுக்கொண்டு, பின்னர் அதன் வரைமுறைகளை மீறிச் செயற்பட்ட இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடன...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி