• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஆண்டின் மீதமுள்ள அரைப்பகுதிக்குள் திட்டங்களை விரைந்து செயற்படுத்துங்கள்!

selvan by selvan
June 19, 2026
in இலங்கை செய்திகள்.
0
ஆண்டின் மீதமுள்ள அரைப்பகுதிக்குள் திட்டங்களை விரைந்து செயற்படுத்துங்கள்!
Share on FacebookShare on Twitter

    இவ் வருடத்தின் எஞ்சியுள்ள மாதங்களுக்குள் திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நிறைவுறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கிப் பணிகளை முன்கொண்டு செல்ல வேண்டும்.” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நா.வேதநாயகனின் பங்குபற்றுதலுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

    யாழ்ப்பாணம் மாவட்டசெயலாளர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து, வடக்கு மாகாண ஆளுநர் தனது இணைத் தலைமையுரையை ஆற்றினார்.

    இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

    “அனைவரும் தமது பெறுமதியான நேரத்தைச் செலவிட்டே இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்கின்றனர். எனவே, இந்தக் கூட்டத்தை மிகவும் வினைத்திறனாகவும் ஆரோக்கியமான முறையிலும் முன்கொண்டு செல்ல அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.” – என்று கேட்டுக்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து தலைமையுரையாற்றிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர்,

    “இங்கு வருகை தந்துள்ள அனைவரும் கற்றவர்கள். எனவே, அனைவரையும் பரஸ்பரம் கௌரவமாக நடத்த வேண்டும்.” – என்று வலியுறுத்தினார்.

    அத்துடன், வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தித் திணைக்களமானது தனது வேலைத்திட்டங்களை மிகவும் வேகமாக முன்னெடுத்து வருவதாகவும், மேலதிக வேலைகளைக் கூட அவர்கள் தாமாகவே கோரிப் பெற்றுச் செய்வதாகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

    இம்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப்பட்டன.

    இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தனித்தனியாக ஆராயப்பட்டன. குறிப்பாக, மாவட்ட செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள், மத்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் என அனைத்தும் தனித்தனியாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

    கூட்டத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் நீண்ட நேரம் விரிவாக ஆராயப்பட்டது.

    கட்டடங்களுக்கான குடிபுகு சான்றிதழானது தனியாருக்கு மாத்திரமன்றி, அரச கட்டடங்கள் மற்றும் திணைக்களங்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என ஆளுநரால் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

    கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ஊடாக மாவட்டக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையின் அவைத் தலைவர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர பிரதி மேயர், நகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கடற்படைத் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் உயர் அதிகாரிகள், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

    Related Posts

    சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகின!

    சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகின!

    by selvan
    June 19, 2026
    0

    2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டுள்ளன.2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது, கடந்த...

    இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும்

    by selvan
    June 19, 2026
    0

    நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

    துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடுமாறு உத்தரவு!

    துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடுமாறு உத்தரவு!

    by selvan
    June 19, 2026
    0

    ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...

    பசிலுக்கு எதிரான பிடியாணையை மீளப் பெற முடியாது! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    by selvan
    June 19, 2026
    0

    முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மாத்தறை பிரதம நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க நிராகரித்துள்ளார். மாத்தறை எளியகந்த வீதி,...

    மன்னாரில் ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு!

    மன்னாரில் ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு!

    by selvan
    June 19, 2026
    0

    ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஸ்தாபக தலைவர் தோழர் கே.பத்மநாபா மற்றும் போராளிகள்,பொது மக்களின் 36 ஆவது ஆண்டு நினைவு தின தியாகிகள் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19) மாலை...

    நுவரேலியாவில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

    நுவரேலியாவில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

    by selvan
    June 19, 2026
    0

    தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு,  நுவரெலியா மாவ்டத்தின் அம்பகமுவ சபை எல்லைக்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கி, பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகள், கடைகள்...

    வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!

    வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!

    by selvan
    June 19, 2026
    0

    யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா...

    நீதி இல்லாத நாட்டிற்கு நீதி அமைச்சர் எதற்கு? – செம்மணியில் போராட்டம்!

    நீதி இல்லாத நாட்டிற்கு நீதி அமைச்சர் எதற்கு? – செம்மணியில் போராட்டம்!

    by selvan
    June 19, 2026
    0

    யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வருகை தரவுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ -...

    மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் பரிட்சார்த்த புகையிரத சேவை முன்னெடுப்பு

    மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் பரிட்சார்த்த புகையிரத சேவை முன்னெடுப்பு

    by selvan
    June 19, 2026
    0

    மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் புகையிரத சேவையின் பரிட்சார்த்த நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (19) மதியம் இடம் பெற்றது.-தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவைகள் கடந்த 6...

    நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி ஒதுக்கப்பட்ட விவகாரம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில்  மோதல்!

    நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி ஒதுக்கப்பட்ட விவகாரம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில்  மோதல்!

    by selvan
    June 19, 2026
    0

    யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாய்த்தர்க்கம் காரணமாகக் கூட்டம்...

    Load More

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி