• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஜே.வி.பி மற்றும் எல்.ரி.ரி.ஈ யினர் அழித்த சொத்துக்கள் நாட்டின் கடன் தொகையை விட அதிகம் – நாமல் சாடல்!

selvan by selvan
June 15, 2026
in இலங்கை செய்திகள்.
0
ஜே.வி.பி மற்றும் எல்.ரி.ரி.ஈ யினர் அழித்த சொத்துக்கள் நாட்டின் கடன் தொகையை விட அதிகம் – நாமல் சாடல்!
Share on FacebookShare on Twitter

இலங்கையின் தற்போதைய ஒட்டுமொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சுமையை விட இரண்டு மடங்கு அதிகமான பெறுமதியுடைய தேசிய சொத்துக்களை ஜே.வி.பி. மற்றும் எல்.ரி.ரி..ஈ அமைப்புகள் கடந்த காலங்களில் திட்டமிட்டு அழித்துள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று மாலை அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு மாபெரும் அழிவுகளை ஏற்படுத்தியவர்களே இன்று எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசின் மீது வீண் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

தற்போதைய அரசின் அமைச்சர்கள் ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாளுக்கு நாள் முரண்பாடான கருத்துக்களைக் கூறித் தங்களது நிர்வாக இயலாமையை மறைக்க முயல்கின்றனர்.

அத்தோடு, இந்தக் கோரத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றில் உதவிய சட்டத்தரணிகள் மற்றும் கடந்த காலத்தில் இது தொடர்பான விசாரணைக் கோப்புகளை மூடிமறைத்தவர்களுக்கே இந்த அரசு இன்று அரச கட்டமைப்புக்குள் உயர் பதவிகளை வழங்கி கௌரவித்துள்ளது.

அரசு தான் வழங்கிய பொய் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் அம்பலமாவதைத் தடுப்பதற்காக, தங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மக்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கையாளுவதற்குத் தற்போது தயாராகி வருகின்றது.

நாட்டின் தற்போதைய விவசாய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பெரும்போகத்துக்கான உரத்தை விவசாயிகளுக்கு முறையாக வழங்குவதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமும் இல்லை.

உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, தங்களுக்கு நெருக்கமான ஒருசில பெரும் வர்த்தகர்களின் நலன்களுக்காக வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களைத் தாராளமாக இறக்குமதி செய்து இந்த அரசு மடிவளர்க்கின்றது. இதனால் நெல், காய்கறி, பழங்கள் மற்றும் கரும்பு விவசாயிகளும், சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களும் கடுமையான கடன் சுமையில் சிக்கித் தங்களது வியாபாரங்களை முழுமையாக மூடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல், நாட்டை கட்டியெழுப்பப் புதிய நிதியங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகப் நாடாளுமன்றத்துக்கு வெளியே கூறப்பட்டாலும், நாடாளுமன்றக் குழுக்களில் அவ்வாறான நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

அரசாங்கக் கணக்குகளில் உள்ள பொதுமக்களின் பணம் தவறான கணக்குகளுக்குச் செல்வதாகவும் தெரியவருகின்றது. சாதாரண மக்களின் வங்கி வைப்புக்கள் மற்றும் வரிகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பும் அதிகாரிகள், அரசுடன் தொடர்புடைய பெரும் வர்த்தகர்களின் கணக்குகளுக்குக் கோடிக்கணக்கான பணம் முறைகேடாகச் செல்லும்போது மௌனம் காக்கின்றனர்.

அதிகப்படியான வரிச்சுமையால் கிராமப்புறக் கடைகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.

பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசால், தனியார் துறையில்கூட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.

கிராம மட்டத்திலிருந்து மத வழிபாட்டுத் தலங்களையும் எல்லைக் கிராமங்களையும் பாதுகாத்த சிவில் பாதுகாப்புப் படை இளைஞர்கள், தற்போதைய ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காகக் கொழும்புக்குக் கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கொண்டு கொழும்பு போன்ற பெருநகரங்களில் வாழவும் முடியாமல், கிராமத்திலுள்ள தங்களது குடும்பங்களுக்குப் பணம் அனுப்பவும் முடியாமல் அந்த இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மற்றும் சாமானிய மக்களுக்காகப் பேசுவதாகக் கூறி ஏழை மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இன்று சாதாரண மக்களின் துயரங்களை ஏறிட்டும் பாராது, பெரும் வர்த்தகர்களின் முதலாளித்துவ வர்க்கத்தைப் பாதுகாக்கும் ஒரு மினுமினுப்பான ஆட்சியாக மாறியுள்ளது.” – என்றார்.

Related Posts

மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கில் மூடப்பட்டுள்ள ஒடியார் வீதியை திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கில் மூடப்பட்டுள்ள ஒடியார் வீதியை திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

by selvan
June 15, 2026
0

மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான, கொம்மாதுறை மேற்கில் மூடப்பட்டுள்ள ஒடியார் வீதியை திறந்து மக்கள் பாவனைக்கு வழங்கவேண்டும் என பிரதேசத்தின் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இன்று...

செம்மணியில் இன்றும் 10 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் இன்றும் 10 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு!

by selvan
June 15, 2026
0

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து பச்சிளம் குழந்தை மற்றும் இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 10 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் இன்று (15) முழுமையாக...

பிள்ளையான் மீது CIDயினர் ஐந்து கொ*லைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்!

பிள்ளையான் மீது CIDயினர் ஐந்து கொ*லைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்!

by selvan
June 15, 2026
0

முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக, மட்டக்களப்பு பிராந்தியத்தில் அரங்கேறிய ஐந்து வெவ்வேறான படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விபரங்களைக் குற்றப்...

கிழக்கு மாகாணத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் ஆரம்பம்

by selvan
June 15, 2026
0

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய  இவ்வாரம் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கமைய  ஜூன் 15 முதல் 20 வரை மதஸ்தலங்கள்  பொதுச் சந்தைகள்...

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.ரி.எம். றாபி நியமனம்

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.ரி.எம். றாபி நியமனம்

by selvan
June 15, 2026
0

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரியானஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று திங்கட்கிழமை (15) இந்த...

அம்பாறையில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமம்!

அம்பாறையில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமம்!

by selvan
June 15, 2026
0

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 24 மணி நேர கடமை கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள...

பாலச்சந்திரனின் மரணம் பற்றி பேசும் ஹக்கீம் முஸ்லிம் பொலிஸாரின் படுகொலையை மறந்தது ஏன்? – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கேள்வி

பாலச்சந்திரனின் மரணம் பற்றி பேசும் ஹக்கீம் முஸ்லிம் பொலிஸாரின் படுகொலையை மறந்தது ஏன்? – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கேள்வி

by selvan
June 15, 2026
0

நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனின் பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்...

மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – மக்கள் போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி.!

மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – மக்கள் போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி.!

by Mathavi
June 15, 2026
0

வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று...

மயிலத்தமடு, மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு.!

மயிலத்தமடு, மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு.!

by Mathavi
June 15, 2026
0

எமக்கான நிலம் கிடைக்கப்பெறும் வரையில் நாம் தொடர்ந்து போராடுவோம். மகாவலி எம்மைப் பயன்படுத்த முடியாது, நாம் மகாவலிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நமக்கு என்று வடக்கு - கிழக்கிலே...

தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.!

தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.!

by Mathavi
June 15, 2026
0

தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. தற்போது நிலவும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி