• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை மறுக்கின்றோம்.!

Mathavi by Mathavi
June 4, 2026
in இலங்கை செய்திகள்.
0
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை மறுக்கின்றோம்.!
Share on FacebookShare on Twitter

எமது மக்களை புலி சாயம் பூசி பிரித்தாளக் கூடாது. சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம். இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதன் ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பில் நேற்று புதன்கிழமை(03) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் பங்கேற்புடன் இரவு கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,
அம்பாறை மாவட்டம் மூன்று இனங்கள் வாழும் சமூகமாக இருக்கின்றோம். இந்த நாட்டில் இன ரீதியான பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் வாழ வேண்டும் என்பதற்காக நாட்டில் உள்ள இரு இனங்களுடன் இணைந்து வாழ்கின்றோம்.

இலங்கை தமிழரசுக் கட்சியானது சிறுபான்மை இன விடுதலைக்காக நீண்ட காலம் பயணித்த ஒரு கட்சியாகும். இதேவேளை கல்முனை பிரதேசம் சம்பந்தமாக இங்கு கூற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. கல்முனை பிரதேசம் என்பது முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாகவும் தமிழ் மக்கள் சிறுபான்மையாகவும் வாழுகின்ற இடமாகும். ஆனால் 1989 ஆண்டு முதல் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் யாவரும் அறிவீர்கள். இப் பிரதேச செயலகம் குறித்து எமது தமிழ்த் தேசிய தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம்.

இந்த முயற்சி எமக்கு கைகூடாத சூழ்நிலையில் தான் நீதிமன்றத்தை நாடி இருந்தோம். அந்த அடிப்படையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக எமது பயணத்தை மேற்கொண்டிருக்கின்றோம். இன்று இம்மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் பல கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார். அவரது அக்கருத்துக்களை பார்க்கின்றபோது இனவாதமாக கூறிவிட்டு அவர் தான் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை முன்வைத்திருக்கின்றார். உண்மையில் நாங்கள் அதை மறுக்கின்றோம்.

நிச்சயமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பொறுத்தவரை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். அவர்களும் ஒரு நிர்வாக கட்டமைப்பினுள் சகல உரிமைகளையும் சகல சலுகைகளையும் பெற்று வாழ வேண்டும் என விரும்புகின்றார்கள். அண்மைக்காலத்தில் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்திருப்பீர்கள். தற்போது நீதிமன்ற தீர்ப்பின் படி தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அந்த மக்களும் சகல உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும். அதே போன்று தான் இப்பிரதேச செயலகத்திற்கும் ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும். அண்மைக்காலங்களில் இச்செயலகத்திற்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் அத்துமீறல்கள் இடம்பெறுவதை சகலரும் அறிவீர்கள்.

சில அரசியல்வாதிகள் அமைப்புகளினால் ஏற்பட்டுள்ள இவ்வாறான அச்சுறுத்தல்களுக்காக நீதிமன்றத்தை நாங்கள் தற்போது நாடி இருக்கின்றோம். அந்த நீதிமன்ற தீர்ப்பு கூட எவ்வாறு அமையப் போகின்றது என தெரியவில்லை. அதே போன்று இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்களும் பல கருத்துக்களை இவ்விடயம் தொடர்பில் தெரிவித்ததாக அறிகின்றோம். அதன் அடிப்படையில் இவ்விடயத்தில் எமது நியாயபூர்வமான உரிமைகளை முன்வைத்திருக்கின்றோம். கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் சிலர் அரசாங்கங்களுடன் பேரம் பேசி சில விடயங்களை சாதித்திருக்கின்றார்கள். நாங்கள் தொடர்ச்சியாக கொள்கையுடன் பயணித்ததன் காரணமாக எமது மக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்திருக்கின்றார்கள்.

அந்த துன்பங்களில் இருந்து மீண்டு வருவதற்காகவே நீதிமன்றத்தை நாங்கள் நாடி இருக்கின்றோம். நாங்கள் நீதிமன்ற தீரப்பினை நம்பி இருக்கின்றோம். அதன் அடிப்படையில் நாங்கள் செயற்படுவோம். அத்துடன் எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் பிரித்தாளக் கூடாது. சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம். இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதன் ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.

Related Posts

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

முதியோர் இல்லத் தீ விபத்து – உரிமையாளர் கைது!

by selvan
June 4, 2026
0

ஹொரணை அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நேற்று (03) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது....

கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீனா வழங்கியது

கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீனா வழங்கியது

by selvan
June 4, 2026
0

கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீன அரசாங்கம் நன்கொடைகளாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சீனதூதுவர்...

ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இனவாதமே காணப்படுகின்றது!

ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இனவாதமே காணப்படுகின்றது!

by selvan
June 4, 2026
0

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று  மாலை கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில்  ஊடக சந்திப்பினை   நடாத்தியிருந்தார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அருட்தந்தை ஜீவந்த பிரீஸ்...

யாழில் சங்கிலிய மன்னனின் 407 ஆவது சிரார்த்ததின  நிகழ்வுகள்..

யாழில் சங்கிலிய மன்னனின் 407 ஆவது சிரார்த்ததின நிகழ்வுகள்..

by selvan
June 4, 2026
0

இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு யாழில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் அரண்மனையில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற உள்ளதாக சங்கிலிய மன்னன் அறக்கட்டளையின்...

பொலிசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து A9 வீதியில் சிரமதானம் 

பொலிசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து A9 வீதியில் சிரமதானம் 

by selvan
June 4, 2026
0

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொலிசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் இணைந்து A9வீதியில் கரடிப்போக்கு சந்தியிலிருந்து இரணைமடு சந்தி வரை சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்...

இனவாதத் தீயை மூட்டி மாணவர்களின் ஒற்றுமையைக் கருக வைக்காதீர் !

இனவாதத் தீயை மூட்டி மாணவர்களின் ஒற்றுமையைக் கருக வைக்காதீர் !

by selvan
June 4, 2026
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் சசிந்து பெரேரா, நாட்டில் மீண்டும் ஒரு இனவாத அலையை...

சொல்லிசைக் கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு! – சுமந்திரன் அறிவிப்பு

சொல்லிசைக் கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு! – சுமந்திரன் அறிவிப்பு

by selvan
June 4, 2026
0

விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில், உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை...

நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்கினார் வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர்!

நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்கினார் வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர்!

by selvan
June 4, 2026
0

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்....

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

by selvan
June 4, 2026
0

களுத்துறை மாவட்டம், ஹொரணை - அங்குருவத்தோட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது....

வடக்கு ஆளுநருக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்துக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

வடக்கு ஆளுநருக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்துக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

by selvan
June 4, 2026
0

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04.06.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி