மஸ்கெலியாவில் இன்றைய தினம் சிறப்பு வெசாக் ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2570 வது வைசாத்தி மங்கள்ய வருடத்தை முன்னிட்டு சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு தப்போவன சுஜீத ஹிமி தலைமையில் இந்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சுமனாராம விகாரையின் பௌத்த சமய தஹாம் பாடசாலை மாணவர்கள், மற்றும் பௌத்த சமய பக்தர்களும் கலந்து கொண்டனர்
இதன்போது மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பூஜை பொருட்கள் பூஜை தட்டுகள் பௌத்த கொடிகள் மற்றும் பௌத்த நடனங்களுடன் மஸ்கெலியா இரண்டாம் சாலை வழியாக சென்று மீண்டும் பிரதான வீது வழியாக சென்று சுமனாராம விகாரையை சென்றடைந்தனர்.
இதேவேளை, இன்று வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா ஜக்கிய நலன்புரி வர்த்தக சங்கம் இணைந்து தானசாலயையும் ஒழுங்கமைத்தனர்.
நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு மற்றும் மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலய பிரதம குரு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வி மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உப தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் அதன் உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது தேசிய கொடி பௌத்த மத கொடி மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் கொடி ஏற்றிய பின் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு சமய பெரியார்களின் சமயம் சார்ந்த சொற்பொழிவு மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வியின் வாழ்துரையுடன் அன்னதான நிகழ்வு ஆரம்பமானது.















