• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

யுத்த வெற்றிக்கான இறுதி மூலோபாயத் திட்டங்கள்அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன!

Bharathy by Bharathy
May 20, 2026
in இலங்கை செய்திகள்
0
யுத்த வெற்றிக்கான இறுதி மூலோபாயத் திட்டங்கள்அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன!
Share on FacebookShare on Twitter

“உலகமே வெல்ல முடியாது என்று கூறிய கொடூரமான பயங்கரவாத அமைப்பை இந்நாட்டின் மண்ணிலிருந்து வேரறுப்பதற்கு, கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இறுதிப் போரின் திருப்புமுனையான மனிதாபிமான நடவடிக்கைக்கான முழுமையான மூலோபாயத் திட்டமிடல்கள் அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன” என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

‘சர்வஜன அதிகாரம்’ கட்சியின் தலைமையக காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற இராணுவ வீரர்களின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “முப்பது வருடங்களாகத் தொடர்ந்த போரில் 30 ஆயிரம் இராணுவ வீரர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளதுடன், 30 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் தமது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இராணுவ வீரர்கள் மட்டும் தனியாக இந்த வெற்றியை ஈட்டவில்லை. அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசியல், சமூக, பொருளாதாரத் தலைமைத்துவங்கள், ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மற்றும் தாய்நாட்டை நேசித்த புலம்பெயர் மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வழங்கிய கூட்டுச் சக்தியினாலேயே இது சாத்தியமானது.

2005 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மஹிந்த ராஜபக்ஷ அரசு ஒரு புதிய கொள்கையை முன்வைத்தது. கோட்டாபய ராஜபக்ஷவின் வழிநடத்தலின் கீழ், அன்றைய முப்படைத் தளபதிகளான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் வசந்த கரன்னாகொட, எயார் சீஃப் மார்ஷல் ரொஷான் குணதிலக ஆகியோருடன் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் இணைந்து ‘மனிதாபிமான நடவடிக்கை’ எனும் கொள்கையை உருவாக்கினர்.

கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை தொடர்பான ஆலோசனைகள் எனது அலுவலகத்திலேயே இடம்பெற்றன. இராணுவத்தின் சிரேஷ்ட தளபதிகளான பிரசன்ன சில்வா மற்றும் சாகி காலகே ஆகியோர் என்னுடன் ஒன்றிணைந்து இதற்கான திட்டங்களை வகுத்தனர்.

ஜெனரல் பிரசன்ன சில்வாவின் தலைமையில் வாகரைப் பகுதியும், ஜெனரல் சாகியின் தலைமையில் தொப்பிகல பகுதியும் மனிதாபிமான நடவடிக்கையினூடாக வெற்றிக் கொள்ளப்பட்டு, இறுதியாக நந்திக்கடல் வரை அந்தப் பயணம் தொடரப்பட்டு முழுமையான வெற்றி எட்டப்பட்டது.

யுத்தம் வெற்றியை நோக்கி நகர்வதற்கு முன்னர், திலித் ஜயவீர மற்றும் வருணி ஆகியோர் தங்களது ‘அபி வெனுவென் அபி’ கொள்கையினூடாக எமக்குத் தேவையான அனைத்துப் பிரச்சாரங்களையும் ஊடக ஆதரவுகளையும் வழங்கிச் சிவில் சமூகத்தை இராணுவத்துடன் ஒன்றிணைக்கப் பெரும் பங்காற்றினர்.

ஆனால், ஒரு இராணுவ வீரனாக இன்று நாட்டில் அரசியல் ரீதியான ஒற்றுமையோ அல்லது எதிர்காலத்தை நோக்கிய தொலைநோக்குப் பார்வையோ இல்லாத நிலையைத்தான் காண முடிகின்றது. 2009 ஆம் ஆண்டின் வெற்றிற்குப் பின்னர் நாம் எதிர்பார்த்த அழகான இலங்கை கிடைக்காதது குறித்து நாம் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளோம்.

எமது அடுத்த தலைமுறைக்கு இந்த வரலாற்று வெற்றிகளைக் கொண்டு சேர்க்க வேண்டுமாயின், இராணுவ இலக்கியம் என்ற ஒன்று உருவாக்கப்பட வேண்டும். எனவே, நான் முன்னின்று ‘இராணுவ இலக்கிய மன்றம்’ என்ற ஒன்றை உருவாக்கி, புத்தகங்களை எழுதி இந்த வரலாற்றைச் சமூகமயப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன்.” – என்றார்.

Related Posts

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்!

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்!

by Bharathy
May 20, 2026
0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது....

இரண்டு இல்லங்களின் “CCTV” இயங்கியும் தரவுகள் மாயமாயம்!!

இரண்டு இல்லங்களின் “CCTV” இயங்கியும் தரவுகள் மாயமாயம்!!

by Bharathy
May 20, 2026
0

"ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணையில், அவரது இல்லம் மற்றும் அவர் மரணமடைந்த இல்லம் ஆகிய இரண்டிலும் இருந்த...

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக கிருஸ்ணேந்திரன் நியமனம்!!

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக கிருஸ்ணேந்திரன் நியமனம்!!

by Bharathy
May 20, 2026
0

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண ஆளுநரினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர்...

பாதுகாப்புச் செயலாளரை நேரில் சந்தித்து பேசினார் இந்திய விமானப்படைத் தளபதி!

பாதுகாப்புச் செயலாளரை நேரில் சந்தித்து பேசினார் இந்திய விமானப்படைத் தளபதி!

by Bharathy
May 20, 2026
0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், நேற்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார்...

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம்!!

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம்!!

by Bharathy
May 20, 2026
0

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி...

வறுமையிலிருந்து எழுந்து சாதிப்பதே உண்மையான சாதனை!

வறுமையிலிருந்து எழுந்து சாதிப்பதே உண்மையான சாதனை!

by Bharathy
May 20, 2026
0

"எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான்...

தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!!                                     யாழ் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிப்பு.

தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!! யாழ் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிப்பு.

by Bharathy
May 20, 2026
0

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைத்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம்...

இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்!

இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்!

by Bharathy
May 20, 2026
0

"இலங்கையில் மூன்று தசாப்த கால கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தமது உயிர்களையும், இரத்தத்தையும், கண்ணீரையும் விலையாகக் கொடுத்த எமது படை வீரர்களின் பிரார்த்தனையான 'அமைதியும்...

மீண்டும் யுத்தம் வந்தால் அநுர அரசே பொறுப்பு!

மீண்டும் யுத்தம் வந்தால் அநுர அரசே பொறுப்பு!

by Bharathy
May 20, 2026
0

"நாட்டில் மீண்டும் ஒரு யுத்தச் சூழ்நிலை உருவானால், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசே  முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் வாக்குகளை இலக்கு...

தனியார் பேருந்து உரிமையாளர்கள் “மகா கிரிக்கெட் போட்டி”; ஹட்டன் யுனைடெட் கழகம் வெற்றி !!

தனியார் பேருந்து உரிமையாளர்கள் “மகா கிரிக்கெட் போட்டி”; ஹட்டன் யுனைடெட் கழகம் வெற்றி !!

by Bharathy
May 20, 2026
0

ஹட்டன் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மத்திய மாகாண தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் (CPPTSA) இணைந்து ஏற்பாடு செய்திருந்த “மகா கிரிக்கெட் போட்டி” நேற்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி