யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து புனித பிலிப்பு நேரியார் வருடாந்த ஆலய திருவிழா சம்பந்தமாக விசேட அறிவித்தல் ஒன்று விடுவிக்கபட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில்,
செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பெருவிழா எதிர்வரும் மே மாதம் விமர்சையாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தையும், பங்கு மக்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
திருவிழாவிற்கான முக்கிய வழிபாடுகளான கொடியேற்றம்:- எதிர்வரும் 17.05.2026 அன்று மாலை 5.00 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா திருப்பலி ஆரம்பமாகும்.
நற்கருணை விழா:- 25.05.2026 அன்று மாலை 5:00 மணியளவில் நற்கருணை பவனி மற்றும் வழிபாடுகள் இடம்பெறும்.
திருவிழா கூட்டுத்திருப்பலி:- 26.05.2026 அன்று காலை 6.30 மணியளவில், வட மாகாண முதல்வர் அடிகளார் அருட்பணி ஜெயந்தன் பச்சேக் அமலரித்தியாகிகள் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களிலிருந்து விசேட பேருந்து போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
திருவிழா மேடைகளுக்கான வியாபாரப் பதிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும். வர்த்தகப் பிரிவினர் தொடர்புகளுக்கு 0771748741 என்ற இலக்கத்தைப் பயன்படுத்தலாம்.
திருவிழா அன்று மாலை, ஆலய முன்றலில் “யுவானியர் தென் மோடி நாட்டுக்கூத்து” கலை நிகழ்வு அரங்கேற்றப்படும்.
புனிதரின் ஆசியைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பங்குத்தந்தையும் பங்கு மக்களும் அனைத்து இறைமக்களையும் அன்புடன் அழைக்கின்றனர்.










