சுமார் 300 ஆண்டுகள் பழமையான 50 கிலோவுக்கும் அதிக எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பழங்கால புத்தர் சிலையுடன் முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் நேற்று (14) கண்டி நகரில் கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமையகக் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் இருவரும் இந்தப் பழங்கால சிலையைக் கண்டிக்கு எடுத்துச் சென்று, அது தங்கத்தினாலானதா? என்பதை உறுதிப்படுத்த முயற்சித்துள்ளனர்.
அப்போது இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் இருவரும் புத்தர் சிலையுடன் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சிலை ஏதேனும் ஒரு விகாரையில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தப் பழங்கால புத்தர் சிலை தொல்பொருள் பெறுமதி வாய்ந்ததா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக, தொல்பொருள் ஆய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Related Posts
கனமழை படிப்படியாகக் குறையும்.!
இலங்கையில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை, எதிர்வரும் நாட்களில் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது...
போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் 734 பேர் சிக்கினார்கள்.!
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு பூராகவும் போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட விசேட...
நன்னீர் இறால் அபிவிருத்தி; ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு அமுல்.!
இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இலாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
பாரவூர்தியுடன் மோதிய உந்துருளி; ஒருவர் உயிரிழப்பு.!
அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதேனிய - அநுராதபுரம் வீதியில் 36வது மைல்கல் அருகே, உந்துருளி ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச்...
சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூவர் கைது.!
குடா ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதில்வெவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், எதில்வெவ பகுதியைச் சேர்ந்த 26...
பட்டிருப்பில் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு.!
மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு பாலத்துக்கு அருகில் இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. இறுதிப்...
ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை கூழாவடி பகுதியில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய...
கஞ்சாவுடன் ஒருவர் கைது.!
சிலாபம், கரவிட்டாகார பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிகளவான கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை மாரவில விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்...
குமுதினி படகில் படு கொ*லை செய்யப்பட்டவர்களின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!
குமுதினி படகில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் 41ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15-05-2026) நெடுந்தீவில் அமைந்துள்ள நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. கடந்த 1985ஆம் ஆண்டு...
மழையின் கோரத்தால் குளத்தின் அணை உடைப்பு; மக்கள் தத்தளிப்பு.!
புத்தளம் - மதுரங்குளி பகுதியில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக, பத்தேயம குளத்தின் அணை உடைந்து பெருக்கெடுத்த வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்ததில் 15 வீடுகள் நீரில்...










