நாட்டின் இருவேறு பகுதிகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு – தலுபொத்த பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தலுபொத்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
இதன்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நீர்கொழும்பு – கட்டுவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கட்டுவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 135 லீற்றர் (180 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் மற்றும் 180 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










