• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சுகாதாரத் துறையில் அதிரடி மாற்றம்.!

Mathavi by Mathavi
May 10, 2026
in இலங்கை செய்திகள்.
0
சுகாதாரத் துறையில் அதிரடி மாற்றம்.!
Share on FacebookShare on Twitter

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் கொண்டு சேர்ப்பதுடன், வளங்களை முன்னுரிமை அடிப்படையில் சரியாகப் பயன்படுத்துவதை இலக்கு வைத்து மாவட்ட மட்டத்திலான சுகாதார சேவை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவதானம் செலுத்தியுள்ளார்.

இதன்படி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ‘மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக’ நியமிப்பதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்படும் சுகாதார நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறைபாடுகளை நீக்கி, மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

புதிய அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் கடமைகள்:
மக்கள் பங்களிப்புடன் மாவட்ட மட்டத்திலான சுகாதாரத் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை முன்னுரிமைப்படுத்துதல்.

அத்தேவைகளை தேசிய மற்றும் மாகாண சுகாதாரத் திட்டங்களுடன் இணைக்க வசதி செய்தல்.

மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்கு இடையே வளங்களைச் சரியாகப் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்தல்.

முக்கியமான புதிய திட்டங்களை அடையாளம் கண்டு அமைச்சுக்குப் பரிந்துரைத்தல்.

தற்போது நடைமுறையிலுள்ள திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, உரிய காலத்திற்குள் அவற்றை நிறைவு செய்ய உதவுதல்.

நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் விபரம்:
அனுராதபுரம்: சுசந்த குமார நவரத்ன
பதுளை: ரவீந்திர பண்டார
மட்டக்களப்பு: கந்தசாமி பிரபு
கொழும்பு: வைத்தியர் நஜித் இந்திக்க
திகாமடுல்ல (அம்பாறை): எம்.எம். சுகத் ரத்நாயக்க
காலி: வைத்தியர் நிஷாந்த சமரவீர
கம்பஹா: தர்மப்பிரிய விஜேசிங்க
ஹம்பாந்தோட்டை: வைத்தியர் சந்தருவன் மதரசிங்க
யாழ்ப்பாணம்: வைத்தியர் எஸ். ஸ்ரீ பவனந்தராஜா
கேகாலை: ஆர்.எம். சமந்த ரணசிங்க
களுத்துறை: வைத்தியர் நிஹால் அபேசிங்க
கண்டி: தனுர திசாநாயக்க
குருநாகல்: வைத்தியர் ஜகத் குணவர்தன
மாத்தளை: செல்வி. தீப்தி நிரஞ்சனி வசலாகே
மாத்தறை: லால் பிரேமநாத்
மொனராகலை: எச்.எம். சரத் குமார
நுவரெலியா: டி. மஞ்சுள சுரவீரஆராச்சி
பொலன்னறுவை: பத்மசிறி பண்டார
புத்தளம்: கயான் ஜனக்க
இரத்தினபுரி: வைத்தியர் ஜனக சேனாரத்ன
திருகோணமலை: ரொஷான் அக்மீமன
வன்னி: செல்வதம்பி திலகநாதன்

இந்த புதிய பொறிமுறையூடாக சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்தி, மக்களுக்கு நம்பிக்கையான மற்றும் இலகுவான சேவையை வழங்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு எதிர்பார்க்கிறது.

Related Posts

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

by Mathavi
May 10, 2026
0

மாவனெல்லை, ஹேலிஸ்வத்த பகுதியில் மா ஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாவனெல்லைப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என...

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; பலர் கைது.!

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; பலர் கைது.!

by Mathavi
May 10, 2026
0

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (09) பொலிஸார் விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, 589 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 10, 2026
0

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர, நிசருவ பகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சுமார்...

யாழ்தேவி ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்.!

யாழ்தேவி ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்.!

by Mathavi
May 10, 2026
0

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ்தேவி ரயில் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திங்கள், புதன் மற்றும்...

யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பதற்கு தீவிர முயற்சி – ஆளுநரும் உடந்தை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு.!

யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பதற்கு தீவிர முயற்சி – ஆளுநரும் உடந்தை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு.!

by Mathavi
May 10, 2026
0

யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு...

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து.!

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து.!

by Mathavi
May 10, 2026
0

பெலியத்த தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த - கசாகல இடையிலான பகுதியில் 154 ஆவது மைல்கல்லுக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் 10...

புதிய தலைமுறையின் எதிர்பார்ப்பே இந்த வெற்றி.!

புதிய தலைமுறையின் எதிர்பார்ப்பே இந்த வெற்றி.!

by Mathavi
May 10, 2026
0

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ச.ஜோசப் விஜய்க்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது...

மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு.!

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 10, 2026
0

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில், நேற்று சனிக்கிழமை (09) சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 05 அடி 06 அங்குலம், குட்டையான தலைமுடி மற்றும் தாடி...

இரு குழுக்களுக்கு இடையே மோதல்; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.!

இரு குழுக்களுக்கு இடையே மோதல்; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
May 10, 2026
0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் நேற்றிரவு (09) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அனுராதபுரம், கொழும்பு...

விஜய்க்கு அநுர வாழ்த்துச் செய்தி.!

விஜய்க்கு அநுர வாழ்த்துச் செய்தி.!

by Mathavi
May 10, 2026
0

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி