உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இது சதியா? தற்செயலா? – யாழ். வைத்தியசாலை தீ விபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

இந்த அனர்த்தம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அனர்த்தம் எமது மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். இது தற்செயலாக நடந்ததா அல்லது ஏதாவது சதிச் செயலாக இருக்குமா என்ற கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், இது சதிச் செயலாக இருக்காது என்றே நான் நம்புகின்றேன்.

தீ விபத்துக்கான உண்மையான காரணம் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே உறுதிப்படுத்தப்படும்.” – என்றார்.

வைத்தியசாலையில் மருந்துகள் தீக்கிரையாகியுள்ள போதிலும், நோயாளர்களுக்கான மருத்துவ சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து உரிய அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும், தேவையான மருந்துப் பொருட்களை உடனடியாக யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

களஞ்சியசாலையில் இருந்த பெறுமதிமிக்க மருந்துகள் மற்றும் உபகரணங்கள் அழிவடைந்துள்ளதால், இதன் நிதி ரீதியான இழப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ். போதனா வைத்தியசாலை வரலாற்றில் ஒரு பாரிய அனர்த்தமாகப் பார்க்கப்படும் இந்தத் தீ விபத்து குறித்து பொலிஸாரும் துறைசார் அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

63 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0