மஸ்கெலியா நகரில் உள்ள பிரதான வீதியில் உள்ள சுமார் 100 அடி நீளம் கொண்ட வடிகால் செப்பனிட படாமல் உள்ளதால் அந்த வடிகால் பகுதியில் உள்ள 12 குடியிருப்பில் வசித்து வரும் மக்கள் பாரிய இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
1968 ம் ஆண்டு காலப் பகுதியில் முன்னைய மஸ்கெலியா நகரம் நாட்டின் மின்சார தேவைக்காக மவுஸ்சாகலை நீர் தேக்க அமைப்பால் புதிய நகரம் அமைக்கப்பட்டது.
அக் காலத்தில் மஸ்கெலியா புதிய நகரம் ஒன்றை உருவாக்க அப்போதைய அரசு முன் வந்து ஒரு சிகரத்தில் மஸ்கெலியா நகரை அமைத்த போது அப்போதைய கிராம சபை இந்த வடிகால் அமைப்பை முறையாக இந்த 180 அடி பகுதியை அமைக்க வில்லை.
அதன் பின்னர் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் மற்றும் அம்பகமு பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு வந்த தவிசாளர்களுக்கு எடுத்து கூறியும் எவரும் கண்டு கொள்ளாமல் கை விட்டு உள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் முன் வந்து இந்த வடிகாலை செப்பனிட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.










