• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 3, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மருதங்கேணியில் விசேட கலந்துரையாடல்; சமூக சீர்கேடுகளைக் களைய அதிரடித் தீர்மானங்கள்.!

Mathavi by Mathavi
May 3, 2026
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
மருதங்கேணியில் விசேட கலந்துரையாடல்; சமூக சீர்கேடுகளைக் களைய அதிரடித் தீர்மானங்கள்.!
Share on FacebookShare on Twitter

மருதங்கேணி பொலிஸ் காரியாலய மண்டபத்தில் இன்று (03.05.2026) பொலிஸ் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அண்மைக்காலமாக சமூகத்தில் இடம்பெற்று வரும் முக்கிய குற்றச் செயல்கள் மற்றும் அவற்றுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் உதவி அத்தியட்சகர் (ASP) மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) ஆகியோர் விரிவான விளக்கங்களை வழங்கினர்.

இக்கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:-
AI தொழில்நுட்பத் தவறுகளும் விழிப்புணர்வும்
வடமராட்சி கிழக்கிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களைத் தடுக்க பாடசாலை ரீதியாக மாணவர்களுக்குப் போதிய சட்ட விழிப்புணர்வுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

கிராமங்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்காக அழைத்து வரப்படும் நபர்கள் தொடர்பான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் தேசிய அடையாள அட்டைப் பிரதி மற்றும் முழுமையான விபரங்களை அந்தந்த பொலிஸ் நிலையங்களில் கட்டாயம் சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்களைத் தராதரம் பார்க்காமல் கைது செய்து, உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.

மணற்காட்டுச் சவுக்க மரத்தோப்பிற்குச் சட்டவிரோதமாகத் தீ மூட்டி, விறகு சேகரிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான இயற்கை வளச் சுரண்டல்களைத் தடுக்கவும், காட்டைப் பாதுகாக்கவும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்பு
18 வயதிற்குக் குறைந்த சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் போது, அக்குற்றத்தை மறைப்பவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஊக்குவிப்பவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இதனைத் தடுக்க பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்களுடன் இணைந்து கிராம மட்டத்தில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

கரையோரக் கண்காணிப்பு மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, கரையோரங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்பவர்களைத் தடுக்கக் கிராம சேவையாளர்களுடன் இணைந்து பொலிஸார் விசேட கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். கரையோரப் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோதப் பயணங்களைத் தடுத்தல் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இறுதியாக சமூக அமைதியைப் பேணவும், குற்றமற்ற பிரதேசமாக மருதங்கேணியை மாற்றவும் பொதுமக்கள் மற்றும் சிவில் குழுக்கள் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என இக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Related Posts

ஆசிரியை ஒருவர் சடலமாக மீட்பு.!

ஆசிரியை ஒருவர் சடலமாக மீட்பு.!

by Mathavi
May 3, 2026
0

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆசிரியர் இறந்த மறுநாள் கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு.!

காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு.!

by Mathavi
May 3, 2026
0

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. காலி சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளினால்...

கடலில் நீராடச் சென்றவர் மாயம்.!

கடலில் நீராடச் சென்றவர் மாயம்.!

by Mathavi
May 3, 2026
0

களுத்துறை, கட்டுகுருந்த கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) நீராடச் சென்ற ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 55 வயதான...

கோர விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு.!

கோர விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு.!

by Mathavi
May 3, 2026
0

வெல்லவாய, மகாஆரகம - சிறிபுர பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மகாஆரகம,...

தப்பியோட முயற்சித்த கைதி மீது துப்பாக்கிப் பிரயோகம்.!

தப்பியோட முயற்சித்த கைதி மீது துப்பாக்கிப் பிரயோகம்.!

by Mathavi
May 3, 2026
0

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிலரை கல்கமுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் சென்றபோது பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோட முயற்சித்த நபர் ஒருவர் மீது...

தையிட்டி பவானி வீதி மீட்பு விவகாரம்; வேலியை அகற்றினால் சட்ட நடவடிக்கை.!

தையிட்டி பவானி வீதி மீட்பு விவகாரம்; வேலியை அகற்றினால் சட்ட நடவடிக்கை.!

by Mathavi
May 3, 2026
0

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியை மீட்கும் நடவடிக்கையைக் கைவிடுமாறு, தவிசாளர் சோ.சுகிர்தனை பலாலி பொலிஸார்...

ஊழல், மோசடியில் ஈடுபடவில்லையெனில் ஏன் அச்சமடைய வேண்டும்?

ஊழல், மோசடியில் ஈடுபடவில்லையெனில் ஏன் அச்சமடைய வேண்டும்?

by Mathavi
May 3, 2026
0

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் அங்கு சென்று முன்னிலையாக வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தின நிகழ்வு.!

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தின நிகழ்வு.!

by Mathavi
May 3, 2026
0

இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக் கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் ஜனன தின நிகழ்வும்...

கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கைது.!

கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கைது.!

by Mathavi
May 3, 2026
0

ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 02ஆம் மைல்கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (02) காலை கேரளா கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட...

மாபெரும் மாயச் சித்திரக் கண்காட்சி ஆரம்பம்.!

மாபெரும் மாயச் சித்திரக் கண்காட்சி ஆரம்பம்.!

by Mathavi
May 3, 2026
0

கிழக்கு மாகாணத்திலும் அதற்கு அப்பாலும் பெண்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்ந்து வலுவூட்டவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் கனடா அரசாங்கம் தொடர்ந்தும் உதவும் என இலங்கைக்காக கனடா தூதுவர் மார்டின்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி