• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 3, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தின நிகழ்வு.!

Mathavi by Mathavi
May 3, 2026
in இலங்கை செய்திகள்., நிகழ்வுகள், மட்டக்களப்பு செய்திகள்
0
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தின நிகழ்வு.!
Share on FacebookShare on Twitter

இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக் கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் ஜனன தின நிகழ்வும் சிறப்பு மலர் வெளியீடும் இன்று நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு நகரில் உள்ள நீரூற்றுப் பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்தர் திருவுருவச்சிலையருகே மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது.

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையுடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்கள், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் யுவன்ராஜன், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் மு.செல்வராஜா உட்பட அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் ஆசிரயர்கள், மாநகரசபையின் பொதுநூலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன் உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது பாடல் பாடப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் இதன்போது இலக்கணம் என்னும் காலாண்டு சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.

இதேநேரம் மட்டக்களப்பு கல்லடி – உப்போடையில் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள அடிகளாரின் சமாதியில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினரின் ஒழுங்கமைப்பில் சுவாமி விபுலானந்தரின் 134வது ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் உதவி பொறுப்பாளர் சுவாமி உமாதீஸ்வரானந்தா ஜீ மஹராஜ், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை தலைவர் க.பாஸ்கரன், பொதுச் செயலாளர் ச.ஜெயராஜா, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் முத்துக்குமார் செல்வராசா, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அடிகளாரது சமாதியில் மலர் மாலை அணிவித்து, பூக்கள் தூவி, “வெள்ளை நிற மல்லிகையோ” பாடல் பாடி ஜனன தின நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்து இன்றுடன் 134 வருடங்கள் ஆகின்றன. 1892 ஆம் வருடம் வைகாசி மாதம் 03 ஆம் திகதி காரைதீவில் சாமித்தம்பி, கண்ணம்மை தம்பதியினருக்கு மயில்வாகனம் எனும் இயற்பெயருடைய சுவாமி விபுலானந்தர் அவதரித்தார்.

சாதாரண மானுடரால் சாதிக்க இயலாத பல செயற்பாடுகளை தனது முயற்சியால் சாதித்து காட்டிய மகான் சுவாமி விபுலானந்த அடிகளார். கல்வி, சமயம் மற்றும் சமூகப் பணிகளில் சுயநலம் இன்றி தன்னை அர்ப்பணித்து சேவை செய்தார்.

மட்டக்களப்பு கல்லடி – உப்போடையில் சிவானந்த வித்தியாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக் கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், என்பன அவர் நிறுவிய கல்வி நிறுவனங்களாகும்.

தலைநகர் கொழும்பில் தமிழ்ப் பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்தியாலயத்தைத் தொடங்கினார். ஒரு சமூகத்துறவி நிறுவிய கல்விச் சாலைகள் அவை. அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார்.

கிழக்கிலங்கையில் அவதரித்து உலகின் முதல் தமிழ் பேராசிரியராக உயர்ந்த மாபெரும் ஆளுமையான சுவாமிகள் எமது சமூகம் மேற்கத்தேய கலாசாரத்தில் மூழ்கியபோது அதனை மீட்டெடுத்து நெறிப்படுத்தியவர் என்பதுடன், ஏழைகளின் வாழ்வில் கல்வி எனும் ஒளி ஏற்றிய கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார்.

Related Posts

தையிட்டி பவானி வீதி மீட்பு விவகாரம்; வேலியை அகற்றினால் சட்ட நடவடிக்கை.!

தையிட்டி பவானி வீதி மீட்பு விவகாரம்; வேலியை அகற்றினால் சட்ட நடவடிக்கை.!

by Mathavi
May 3, 2026
0

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியை மீட்கும் நடவடிக்கையைக் கைவிடுமாறு, தவிசாளர் சோ.சுகிர்தனை பலாலி பொலிஸார்...

ஊழல், மோசடியில் ஈடுபடவில்லையெனில் ஏன் அச்சமடைய வேண்டும்?

ஊழல், மோசடியில் ஈடுபடவில்லையெனில் ஏன் அச்சமடைய வேண்டும்?

by Mathavi
May 3, 2026
0

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் அங்கு சென்று முன்னிலையாக வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கைது.!

கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கைது.!

by Mathavi
May 3, 2026
0

ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 02ஆம் மைல்கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (02) காலை கேரளா கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட...

மாபெரும் மாயச் சித்திரக் கண்காட்சி ஆரம்பம்.!

மாபெரும் மாயச் சித்திரக் கண்காட்சி ஆரம்பம்.!

by Mathavi
May 3, 2026
0

கிழக்கு மாகாணத்திலும் அதற்கு அப்பாலும் பெண்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்ந்து வலுவூட்டவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் கனடா அரசாங்கம் தொடர்ந்தும் உதவும் என இலங்கைக்காக கனடா தூதுவர் மார்டின்...

இலங்கை வந்தடைந்தார் ரஷ்ய சுகாதார அமைச்சர்.!

இலங்கை வந்தடைந்தார் ரஷ்ய சுகாதார அமைச்சர்.!

by Mathavi
May 3, 2026
0

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான குழுவினர் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர். ரஷ்யாவின் மொஸ்கோ நகரில்...

இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் கைது.!

யாழில் சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரம்; சிக்கிய சந்தேகநபர்கள்.!

by Mathavi
May 3, 2026
0

யாழில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் ஆண் இன்று(03) கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து இருபது கசிப்பு...

பலத்த மின்னலுடன் மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.!

பலத்த மின்னலுடன் மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.!

by Mathavi
May 3, 2026
0

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாரத்ன இன்று (03)...

மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 3, 2026
0

பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹலகம பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அம்பேபுஸ்ஸ பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் என...

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது.!

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது.!

by Mathavi
May 3, 2026
0

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப்...

ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி கிளிநொச்சியில் மக்கள் மாநாடு.!

ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி கிளிநொச்சியில் மக்கள் மாநாடு.!

by Mathavi
May 3, 2026
0

"ஊர் திரள்வோம், உலகிற்குச் சொல்வோம்" எனும் முழக்கத்துடன், ஈழத் தமிழர் உரிமைகள் பெறு மன்றத்தின் (ETRA) ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இன்று பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிளிநொச்சி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி