இந்தியாவின் சுமார் 81,000 கோடி மதிப்புள்ள கிரேட் நிகோபார் திட்டம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி விமர்சித்துப் பேசியுள்ளார்.
“இது நம்முடைய வாழ்நாளில் நமது நாட்டின் இயற்கை மற்றும் பழங்குடி பாரம்பரியத்துக்கு எதிராக நடத்தப்படும் மிகப்பெரிய ஊழல் மற்றும் மிகவும் மோசமான குற்றமாகும்,” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தென்கிழக்கு பகுதியான நிகோபார் தீவிற்கு ராகுல் காந்தி சென்றதைத் தொடர்ந்து கிரேட் நிகோபார் திட்டம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.
இந்தியாவின் தொலைதூர தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிரேட் நிகோபார் தீவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் சரக்கு மாற்றுத் துறைமுகம், விமான நிலையம், நகரம் மற்றும் மின் நிலையம் ஆகியவை அடங்கும்.
பொருளாதார மற்றும் உத்திசார் கண்ணோட்டத்தில், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் இந்தத் திட்டம் முக்கியமானது என்று அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் ஷொம்பென் மற்றும் நிகோபரீஸ் பழங்குடிகள் இந்தத் திட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என ராகுல் காந்தி கூறுகிறார்.










