உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டுள்ளது ; ரணில் விக்ரமசிங்க!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

தற்போதைய அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று மே 1 ஆம் திகதி மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடத்திய மே தினக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலக்கரி மோசடி மற்றும் மத்திய திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டமை ஆகியவை அண்மைய காலத்தின் பாரிய ஊழல்களாகும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டுள்ள நிலையில் ஆளும் தரப்பினர் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் குரல் எழுப்ப இடமளிக்கப்படாமல் அச்சுறுத்தல்கள் மூலம் ஆட்சி நடத்தப்படுகிறது. தோல்வி பயத்தினால் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் இம்முறை மே தினத்திற்காகத் தெரிவு செய்துள்ள உருட்டு, பிரட்டு, திருட்டு என்ற வாசகம் தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது. இந்த வாசகத்தை உள்ளூராட்சி சபைகள் ஊடாக அடிமட்ட மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும்.

பௌத்த உரிமைகள் மீறப்படுவதாகவும், கத்தோலிக்க திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மரபுகள் மீறப்படுகின்றமையும் கவலையளிக்கிறது. 1977 ஆம் ஆண்டு முதல் ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்போது முடங்கியுள்ளன.

வாழ்த்துச் செய்தியின் இறுதியில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0