1795
திருகோணமலை, பிரெடரிக் கோட்டையை ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.
1993
யாழ்ப்பாணம், கிளாலியில் இரண்டு இலங்கைக் கடற்படைப் படகுகள் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
2006
திருகோணமலை மூதூர் கிழக்கில் இலங்கை விமானப்படைப் போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1789
பிரான்சியப் புரட்சி: மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை பிரான்சிய நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1791
நீராவிக் கப்பலுக்கான அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோன் பிட்ச் பெற்றுக் கொண்டார்.
1814
சிலி விடுதலைப் போர்: சிலியில் கிளர்ச்சியாளர்களுக்கிடையே சண்டை மூண்டது.
1883
இந்தோனேசியாவின் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு கடைசித் தடவையாக வெடிக்க ஆரம்பித்தது.
1914
முதலாம் உலகப் போர்: 20-நாள் முற்றுகையை அடுத்து, ஜேர்மன் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரான்சிய, பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்தது.
1920
ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் அரசியலமைப்பின் 19-வது திருத்தச்சட்டமூலம் அமுலுக்கு வந்தது.
1922
கிரேக்க – துருக்கியப் போர் (1919–22): துருக்கிய இராணுவத்தினரின் பெரும் தாக்குதல்களில் கிரேக்கத்தின் முக்கிய பாதுகாப்பு அரண்கள் தகர்க்கப்பட்டன.
1942
உக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாட்சி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியகற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர். இப்படுகொலைகள் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தன.
1944
இரண்டாம் உலகப் போர்: சார்லஸ் டி கோல் பாரிசினுள் நுழைந்தார்.
1966
தென்னாப்பிரிக்காவில் எல்லைப் போர் ஆரம்பமானது.
1970
ஐக்கிய அமெரிக்காவில் புதிய பெண்ணிய இயக்கம் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தி பணி நிறுத்தங்களில் ஈடுபட்டது.
1972
22ஆவது ஒலிம்பிக் போட்டிகள் ஜேர்மனி, மியூனிக்கில் ஆரம்பமானது.
1977
பிரெஞ்சு மொழி உரிமை ஆவணம் கியூபெக் சட்டமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1978
அல்பீனோ லூசியானி முதலாவது அருளப்பர் சின்னப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1978
முதலாவது ஜேர்மனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.
1997
அல்சீரியாவில் 60-இற்கு மேற்பட்டோர் பென் அலி என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.
1999
ரஷியக் குடியரசான தாகெஸ்தானை இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஊடுருவியதற்குப் பதிலடியாக, ரஷ்சியா இரண்டாவது செச்சினியப் போரை ஆரம்பித்தது.















