1803
யாழ்ப்பாணம் பனங்காமப்பற்று மன்னன் பண்டாரவன்னியன் கண்டியர்களின் உதவியுடன் முல்லைத்தீவைத் தாக்கிக் கைப்பற்றினார். விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்சென்ட்னால் முறியடிக்கப்பட்டது.
1814
பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வாசிங்டன் எரியூட்டலின் இரண்டாம் நாளில் பிரித்தானியப் படையினர் அமெரிக்கக் காங்கிரசு நூலகம், அமெரிக்கத் திறைசேரி மற்றும் பல அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.
1823
அமெரிக்க தேடலியலாளர், விலங்கின் மென்மயிர் வணிகர் இயூ கிளாசு தெற்கு டகோட்டாவில் தேடலுக்குச் சென்ற போது கொடுங்கரடியினால் தாக்கப்பட்டார்.
1825
உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
1830
பெல்ஜிய புரட்சி ஆரம்பமானது.
1875
ஆங்கிலேயக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை மெத்தியூ வெப் பெற்றார்.
1894
அரையாப்பு நோய்க்கான தொற்றுக் கிருமியை கிடசாடோ சிபாசாபுரோ கண்டுபிடித்தார்.
1898
கிரேக்கத்தில் துருக்கியக் கும்பலால் 700 பொது மக்கள், 17 பிரித்தானியக் காவலர்கள், கிரீட் நகர பிரித்தானியத் தூதர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
1914
முதலாம் உலகப் போர்: ஜப்பான் ஆத்திரியா – அங்கேரி மீது போர் தொடுத்தது.
1914
முதலாம் உலகப் போர்: பெல்சியத்தில் உள்ள லியூவென் கத்தோலிக்கப் பல்கலைக்கழக நூலகம் ஜேர்மனிய இராணுவத்தால் சேதமாக்கப்பட்டதில், ஆயிரக்கணக்கான நூல்கள், வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டன.
1920
போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகஸ்ட் 13 இல் ஆரம்பித்த போர் செஞ்சேனையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
1933
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9,000 பேர் உயிரிழந்தனர்.
1939
ஐக்கிய இராச்சியமும் போலந்தும் இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்தின.
1940
இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் முதல் தடவையாக பெர்லின் மீது குண்டுகளை வீசியது.
1944
இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளால் பாரிஸ் விடுவிக்கப்பட்டது.
1945 –
இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் சரணடைந்து பத்து நாட்கள் கடந்த நிலையில், சீனப் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளர்கள் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இருவரைக் கொன்றனர். இதுவே பனிப்போரின் முதலாவது கொலைகள் எனக் கருதப்படுகிறது.
1950
வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமன் நாட்டின் சாலைகளை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தரவிட்டார்.
1955
கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.
1961
எட்டு மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த யானியோ குவாத்ரோசு பிரேசிலின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
1967
அமெரிக்க நாட்சிக் கட்சியின் நிறுவனர் ஜார்ஜ் ரொக்வெல் அவரது குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவனால் கொல்லப்பட்டார்.
1980
சிம்பாப்வே ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1981
வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகக்கிட்டவாகச் சென்றது.
1989
வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக்க் கிட்டவாகச் சென்றது.
1991
லினசு டோர்வால்டுசு லினக்சு இயக்குதளத்தை அறிமுகப்படுத்தினார்.
1991
சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.
2001
பகாமாசில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் அமெரிக்கப் பாடகி ஆலியாவும் அவரது குழுவினரும் கொல்லப்பட்டனர்.
2003
மும்பையில் இரண்டு வாகனக் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
2006
உக்ரைனின் முன்னாள் பிரதமர் பாவ்லோ லசரென்கோ ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 9 ஆண்டுகள் சிறைத்தண்டை பெற்றார்.
2007
இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
2012
வொயேஜர் 1 விண்கலம் விண்மீனிடைவெளிக்குச் சென்ற முதலாவது மனிதரால் உருவாக்கப்பட்ட விண்பொருள் என்ற சாதனையை நிலைநாட்டியது.
2017
அரியானா கலவரம்: இந்தியாவில் அரியானா மாநிலத்தில் தொடங்கிய வன்முறைகள் பஞ்சாப், புதுடெல்லிக்கும் பரவியதில், 36 பேர் உயிரிழந்தனர், 250 பேர் காயமடைந்தனர்.
















