• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று..!

admin by admin
June 24, 2025
in இலங்கை செய்திகள்.
0
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று..!
Share on FacebookShare on Twitter

“மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சில இடங்களில் முன்னெடுக்கப்படும் கசிப்பு மற்றும் போதைப்பொருள் விற்பனைகள் தொடர்பில் பொலிஸார் மற்றும் மது வரித்திணைக்கள அதிகாரிகள் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (24) நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரட்னத்தின் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்கள அதிகாரிகள் எனப் பல்வேறு திணைக்கள பதவி நிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த ஆண்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் பூர்த்தியடையாத வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கான பணிப்புரைகளும் விடுக்கப்பட்டன.

இதேபோன்று 2026 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி, உலக உணவு திட்டத்தின் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூன்று கிராமங்கள் தெரிவு செய்ய்பட்டுள்ள நிலையில் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் என்பன குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன் தேசிய வீடமைப்பு அதிகார சபை, மீள்குடியேற்ற அமைச்சு என்பனவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டங்கள், சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டு அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாநகர சபை ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும், அதற்கான உதவிகளையும் ஆதரவினை வழங்குவது குறித்தும் பல்வேறு கருத்துகளும் தெரிவிக்கப்பட்;டன.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், விளையாட்டுக்கழகங்கள் எதிர்நோக்கும் மைதானப் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டதுடன் மைதானப் பிரச்சினைகளை எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து தீர்த்து வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

நாவற்குடா போன்ற பகுதியில் கடந்த 35 வருடத்திற்கும் மேலாக காணி உறுதிகள் மற்றும் எந்தவித ஆவனங்களும் இல்லாத நிலையில் உள்ள மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அவற்றினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கும் முகமாக நடமாடும் சேவைகளை நடாத்துவது தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சில இடங்களில் கசிப்பு விற்பனைகள் என்பது அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில் கடந்த காலத்தில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபோதிலும் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் இதுவரையில் அதனை தடுப்பதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லையென இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் மட்டக்களப்பு சிரேஸ்ட அத்தியட்சகர் காரியாலய விசேட போதை ஒழிப்பு பிரிவினையும் மட்டக்களப்பு மாவட்ட மது வரித்திணைக்களம் என்பன இணைந்து கசிப்பு மற்றும் போதைப்பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இங்கு பணிக்கப்பட்டது.

Related Posts

காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.!

காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.!

by Mathavi
June 24, 2026
0

இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான...

காரில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்; பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி கைது.!

காரில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்; பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி கைது.!

by Mathavi
June 24, 2026
0

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன்,...

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்.!

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்.!

by Mathavi
June 24, 2026
0

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணியளவில் மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை அடிகளார், மற்றும்...

ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டி அரசின் ஒற்றை நோக்கம்.!

ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டி அரசின் ஒற்றை நோக்கம்.!

by Mathavi
June 24, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால், ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் காணிப் பிரச்சினைக்கு முடிவில்லை.!

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் காணிப் பிரச்சினைக்கு முடிவில்லை.!

by Mathavi
June 24, 2026
0

"போர் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் எங்கள் மக்களின் காணிப் பிரச்சினைகளை எவ்வளவு காலத்துக்கு நாம் இழுத்தடிக்கப் போகின்றோம்? பாதிக்கப்பட்டவர்கள் எமது முல்லைத்தீவு மக்கள் என்ற...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 24, 2026
0

காலி - பொத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாக்வெல்ல பாலத்திற்கு அருகிலுள்ள ஜின் கங்கையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் பொத்தல பொலிஸார்...

போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது.!

by Mathavi
June 24, 2026
0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது...

அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய உலங்கு வானூர்திகள் விமானப்படையில் இணைப்பு.!

அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய உலங்கு வானூர்திகள் விமானப்படையில் இணைப்பு.!

by Mathavi
June 24, 2026
0

இலங்கை விமானப்படையின் விமானிகள் பயிற்சித் திறனை மேம்படுத்துவதற்கும், வான்படைச் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக அமெரிக்க அரசால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரி.எச். 57 'சீ ரேஞ்சர்' ரக...

பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும்.!

பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும்.!

by Mathavi
June 24, 2026
0

புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்துக்குத் தற்போதைய சூழலில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், நாட்டில் புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது...

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு செம்மணியே ஆவணம்.!

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு செம்மணியே ஆவணம்.!

by Mathavi
June 24, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், தமிழ் மக்களுக்கு எதிராகக் காலம் காலமாக அரங்கேற்றப்பட்ட அநீதிகளையும் இனப்படுகொலைகளையும் சர்வதேச ரீதியில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி