• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று..!

admin by admin
June 24, 2025
in இலங்கை செய்திகள்.
0
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று..!
Share on FacebookShare on Twitter

“மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சில இடங்களில் முன்னெடுக்கப்படும் கசிப்பு மற்றும் போதைப்பொருள் விற்பனைகள் தொடர்பில் பொலிஸார் மற்றும் மது வரித்திணைக்கள அதிகாரிகள் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (24) நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரட்னத்தின் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்கள அதிகாரிகள் எனப் பல்வேறு திணைக்கள பதவி நிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த ஆண்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் பூர்த்தியடையாத வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கான பணிப்புரைகளும் விடுக்கப்பட்டன.

இதேபோன்று 2026 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி, உலக உணவு திட்டத்தின் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூன்று கிராமங்கள் தெரிவு செய்ய்பட்டுள்ள நிலையில் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் என்பன குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன் தேசிய வீடமைப்பு அதிகார சபை, மீள்குடியேற்ற அமைச்சு என்பனவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டங்கள், சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டு அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாநகர சபை ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும், அதற்கான உதவிகளையும் ஆதரவினை வழங்குவது குறித்தும் பல்வேறு கருத்துகளும் தெரிவிக்கப்பட்;டன.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், விளையாட்டுக்கழகங்கள் எதிர்நோக்கும் மைதானப் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டதுடன் மைதானப் பிரச்சினைகளை எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து தீர்த்து வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

நாவற்குடா போன்ற பகுதியில் கடந்த 35 வருடத்திற்கும் மேலாக காணி உறுதிகள் மற்றும் எந்தவித ஆவனங்களும் இல்லாத நிலையில் உள்ள மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அவற்றினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கும் முகமாக நடமாடும் சேவைகளை நடாத்துவது தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சில இடங்களில் கசிப்பு விற்பனைகள் என்பது அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில் கடந்த காலத்தில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபோதிலும் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் இதுவரையில் அதனை தடுப்பதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லையென இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் மட்டக்களப்பு சிரேஸ்ட அத்தியட்சகர் காரியாலய விசேட போதை ஒழிப்பு பிரிவினையும் மட்டக்களப்பு மாவட்ட மது வரித்திணைக்களம் என்பன இணைந்து கசிப்பு மற்றும் போதைப்பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இங்கு பணிக்கப்பட்டது.

Related Posts

மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள ஒளவை விழா.!

மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள ஒளவை விழா.!

by Mathavi
June 17, 2026
0

மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவை மற்றும் அனுசரணையாளர்கள் இணைந்து நடத்தும் ஒளவை விழா"எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஊடக...

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிக்கு சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருது.!

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிக்கு சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருது.!

by Mathavi
June 17, 2026
0

வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா SLASSCOM நிறுவனத்தின் ஆதரவுடன் இடம்பெற்று வருகிறது. இவ் வருடத்திற்கான விழா...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவரின் சீற்றம்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவரின் சீற்றம்.!

by Mathavi
June 17, 2026
0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தொகுதிக் கிளைகள், மற்றும் மாவட்ட கிளைகளுக்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு முறைகேடாக யாப்புக்கு முரணாக இடம்பெற்றுள்ளது என்பதனை சுட்டிக்காட்டியும்,...

பொய் கூறி ஆட்சிக்கு வந்த அரசு அனைவரையும் ஏமாற்றிவிட்டது.!

பொய் கூறி ஆட்சிக்கு வந்த அரசு அனைவரையும் ஏமாற்றிவிட்டது.!

by Mathavi
June 17, 2026
0

பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்...

உண்மைகளைக் கொட்டுவதே சுரேஷ் சலேவுக்குப் பெருமை.!

உண்மைகளைக் கொட்டுவதே சுரேஷ் சலேவுக்குப் பெருமை.!

by Mathavi
June 17, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துத் தனக்குத் தெரிந்த உண்மைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வெளிப்படுத்துவதே சுரேஷ் சலே செய்ய வேண்டிய மிகச் சிறந்த செயலாகும் என்று...

பாடத்திட்டங்களை முடிக்க கால அவகாசம் போதாது; உயர்தரப் பரீட்சையை ஒத்திவையுங்கள்.!

பாடத்திட்டங்களை முடிக்க கால அவகாசம் போதாது; உயர்தரப் பரீட்சையை ஒத்திவையுங்கள்.!

by Mathavi
June 17, 2026
0

எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும், 2026ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்குப் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும்...

மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்கக் கோரி அரசுக்கு பொதுஜன பெரமுன கடும் அழுத்தம்.!

மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்கக் கோரி அரசுக்கு பொதுஜன பெரமுன கடும் அழுத்தம்.!

by Mathavi
June 17, 2026
0

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மக்களுக்கு அவசர நிவாரணங்களை வழங்குவது குறித்த விரிவான விளக்கங்கள் மற்றும் யோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரமடைவதால் சிலர் பதற்றம்.!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரமடைவதால் சிலர் பதற்றம்.!

by Mathavi
June 17, 2026
0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ளார் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் வதந்தியானவை என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

செம்மணி அகழ்வுத் தளத்தை வெள்ளியன்று நேரில் பார்வையிடுகின்றார் நீதி அமைச்சர்.!

செம்மணி அகழ்வுத் தளத்தை வெள்ளியன்று நேரில் பார்வையிடுகின்றார் நீதி அமைச்சர்.!

by Mathavi
June 17, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் ஆகியோர் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நேரில்...

செம்மணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் மீட்பு.!

செம்மணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் மீட்பு.!

by Mathavi
June 17, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது புதிதாக 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி