கட்டான வடக்கு வலயத்தின் பல பகுதிகளில் நாளை(19) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நாளை புதன்கிழமை காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கட்டான கிழக்கு, பம்புகுளிய, முருத்தான, உடங்காவ, மானவேரிய, தோப்புவ, கலுவாரிப்புவ மேற்கு, மேல் கதவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, ஆடிக்கண்டிய, எத்கால, எத்கால தெற்கு, மஹ எத்கால மற்றும் கலுவாரிப்புவ கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.