திருகோணமலை – வெருகல் பகுதியைச் சேர்ந்த திருமதி. கனகராசா ஈஸ்வரி என்ற 53 வயதுடைய தாய் ஒருவர் 20.05.2025 அன்று காலை திருகோணமலைக்கு செல்வதாக பேருந்தில் சென்றுள்ள நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதுவரை அவர் தொடர்பான எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் தொடர்ந்தும் தேடி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
சில நேரங்களில் மன அழுத்தம் காரணமாக மறந்துபோய் எங்கே செல்கின்றோம் என்று தெரியாமல் பாதை தவறிச் சென்றுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே இவரை யாரும் கண்டால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
தொடர்புகளுக்கு :-
கணவன் – கனகராசா 0752440702.
மருமகன் – ஜெகன் 0755314983
தாயை கண்டுபிடிக்க இதனை பகிர்ந்து உதவுங்கள்.
