• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 26, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழரசு வீறுநடை போடட்டும் – ரெலோவில் இருந்து விலகி வந்த விந்தன் சூளுரை.!

Mathavi by Mathavi
March 13, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
தமிழரசு வீறுநடை போடட்டும் – ரெலோவில் இருந்து விலகி வந்த விந்தன் சூளுரை.!
Share on FacebookShare on Twitter

“எம் மக்களுக்காகவே நான் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளேன். ஆனால், இந்தக் கட்சியிலும் சில குறைகள், பிரச்சினைகள் இருந்தாலும் அதனைச் சீர்செய்து தொடர்ந்து தமிழரசுடனேயே பயணிப்பேன். தமிழரசு வீறுநடை போட வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

ரெலோ கட்சியின் நீண்ட கால உறுப்பினராகவும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்த விந்தன் கனகரட்ணம் கடந்த திங்கட்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார். அவர் நேற்று யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தி தான் ரெலோவில் இருந்து விலகியமை மற்றும் தமிழரசில் இணைந்து கொண்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்தினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

“கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் ரெலோ அமைப்பில் இணைந்து ஆயுதப் போராட்டத்திலும் அதன் பின்னரான அரசியல் போராட்டத்திலும் என 41 வருடங்கள் தொடர்ந்து அந்த அமைப்பில் பயணித்து வந்திருக்கின்றேன்.

ஆனால், நான் சார்ந்திருந்த ரெலோ கட்சியானது ஒரு சிலரின் சுயநலன்களுக்காக அரசியல் சோரம் போய் சொந்த மக்களுக்கே துரோகம் இழைத்து டீல் அரசியல் நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கின்றது.

குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்திய அவருக்கே எமது கட்சி ஆதரவை வழங்கியது. ஆனால், உண்மையில் ஒரு சிலரின் டீல் அரசியலால் அரசுக்குச் சோரம் போய் பொது வேட்பாளருக்குத் துரோகம் செய்தது. அதாவது ரணிலை ஜனாதிபதியாக்கும் நோக்குடன் ரணிலுக்கு மறைமுக ஆதரவு கொடுத்தது. அதற்கு கையூட்டாக இவர்கள் என்னத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்ற ஆவணம் என் கையில் இருக்கின்றது.

இதற்கு முதல் 2023 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதியாக ரணிலை நிறுத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டலஸை ஆதரிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இந்த முடிவையும் மீறி டீல் அரசியல் காரணமாக மறைமுகமாக ரணிலை ஆதரித்து வாக்களித்தனர்.

இத்தகைய டீல் அரசியலைச் செய்தவர் வேறு யாருமல்ல. எமது கட்சியில் இருக்கின்ற ஒருவர்தான். அவர் ஒரு போலித் தேசியவாதி. அவர் கொழும்பில் பாரிய மோசடி செய்தவர். அதுமட்டுமல்லாது பின்கதவு அரசியல் செய்வதில் வல்லவர். யுத்தம் முடியும் வரை மறைந்திருந்து அதன் பின்னர் வந்து அரசியல் டீல் செய்யும் எட்டப்பன்.

அவ்வாறான ஒருவர்தான் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க டீல் செய்து ஒருவருக்கு பத்துக் கோடி ரூபா பேரம் பேசி அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரணிலுக்கான ஆதரவைப் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கூட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வினோநோகராதலிங்கத்தின் பெயரைக் கூறி அந்த டீல் அரசியல் செய்யும் எட்டப்பன் இரண்டு கோடி ரூபாவைச் சுருட்டிக் கொண்டார்.

இதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட எமது கட்சிக்கு வழங்கப்பட்ட ஆசனம் கூட பணத்துக்காக விற்கப்பட்டது என்று அறிகின்றோம்.

இதுபோன்று நண்பர் ஒருவருக்கு பார் லைசன்ஸ் கேட்டு அதனையும் பெற்றுக்கொண்டு அதையும் 7 கோடி ரூபாவுக்கு அவர் விற்றிருக்கின்றார். இந்த லைசன்ஸ் வழங்க உதவியவர் தனக்கும் அவர் துரோகம் இழைத்துள்ளார் என்று என்னுடன் மட்டுமல்ல நான் சார்ந்திருந்த அந்தக் கட்சியின் மிக முக்கியஸ்தர்கள் பலருடனும் அழுது புலம்பியுள்ளார்.

இவ்வாறு வினோவின் பெயரைப் பயன்படுத்தி 2 கோடி ரூபாவும், பார் லைசன்ஸ் என்று கூறி 8 கோடி ரூபாவும், அதேபோன்று ரணிலுக்கு ஆதரவு எனப் பல கோடி ரூபாவையும் அவர் பெற்றுக்கொண்டிருக்கின்றார்.

இத்தகைய மோசடிகள் தொடர்பில் வினோவும் பார் லைசன்ஸ்காரரும் என்னுடனும் கட்சி சார்ந்த ஏனைய பலருடனும் தொலைபேசிகளில் கதைத்திருக்கின்றார்கள்.

இவ்வாறாக பின்கதவு அரசியல் டீலராகப் பல கோடி ரூபாய்களை ஏமாற்றிப் பெற்றுக்கொண்டு தமிழினத்திற்கு எதிராகச் செய்த துரோகத்தனங்களை அவரால் மறுதலிக்க முடியுமா?

இவ்வாறாக தரகர் அரசியல் செய்து பல கோடி ரூபாய்களை ஆட்டையைப் போட்டதை அறிந்தும் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் அதற்கு உடந்தையாகவே தலையாட்டிகள் போன்று கட்சித் தலைமை இருக்கின்றது.

தமிழ் மக்களை ஏமாற்றி மோசடி செய்து மண்ணையும் மக்களையும் விற்றுப் பிழைக்கும் ஈனப்பிறவிகள் அல்லது தமிழினத் துரோகிகளை விரட்டியடிக்க வேண்டும். ஆக மொத்தத்தில் இவர்களைப் போன்று வடக்கு, கிழக்கில் உள்ள போலித் தேசியவாதிகளை தேர்தல்களில் தோற்கடித்து விரட்ட வேண்டும்.

இவை மட்டுமல்ல 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்த கட்சி ஜே.வி.பி.தான். அதன் பின்னர் ஒன்றாக இருந்த வடக்கு, கிழக்கையும் கூட இரண்டாகப் பிரித்த கட்சியும் இந்த ஜே.வி.பி.தான். ஆனால், இந்தக் கட்சியின் பட்ஜட்டுக்கே தமிழ்த் தேசியம் பேசும் எம்.பி. ஒருவரும் வாக்களித்துள்ளார்.

உண்மையில் இந்த ஜே.வி.பி. அரசியல் கைதிகளை விடுவித்தார்களா? காணாமல்போனவர்களுக்கு என்ன செய்தார்கள்? பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கினார்களா? காணியை விடுவித்தார்களா? அரசியல் தீர்வைத் தருவோம் எனக் கூறினார்களா?

இப்படி தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வை வழங்காத அதுவும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்ற இந்த அரசுக்கு ஆதரவாக ஏன் வாக்களிக்க வேண்டும்? ஆனாலும் ஒருவர் வாக்களித்துள்ளார் என்றால் அது எவ்வளவு பெரிய வெட்கக்கேடானது.

குறிப்பாக தமிழீழம் கேட்டோம். அதன்பின்னர் சமஷ்டி கேட்டோம். ஆனால் இப்போது வடக்குக்கு நிதி ஒதுக்கினாலே போதும் என்ற மிக மோசமான நிலையில் நாம் இருக்கின்றோம். வடக்குக்கு நிதி ஒதுக்கீடு வந்ததற்காக வாக்களிப்பது மிகவும் கேவலமானது.

இவ்வாறு நான் சார்ந்திருந்த கட்சியின் பல்வேறு நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை. அதனை எமது மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுடன் இவை எல்லாம் எமது மக்களுக்கு விரோதமானவையாகவே இருக்கின்றது.

இதனாலேயே மக்களுக்காக நான் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளேன். ஆனால், இந்தக் கட்சியிலும் சில குறைகள், பிரச்சினைகள் இருந்தாலும் அதனைச் சீர்செய்து தொடர்ந்து தமிழரசுடனேயே பயணிப்பேன். தமிழரசு வீறுநடை போட வேண்டும்.

மேலும் இந்த அரசு இப்போது பட்டலந்த வதை முகாம் பற்றி பேச ஆரம்பித்துள்ளது. அதற்கு நடவடிக்கை எடுப்பதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், இந்த ஜனாதிபதி அனைத்து இன மக்களையும் சமமாகப் பார்க்கின்றார் என்றால் அல்லது முழு நாட்டுக்கும் ஜனாதிபதி என்றால் தமிழ் மக்களுக்கு நடந்தவற்றுக்கும் நீதி, நியாயம் வழங்க வேண்டும். அதற்கு அவர் தாயாரா? எனக் கேட்கின்றோம்.

பட்டலந்த விவகாரத்தை இப்போது பேசுவது தேர்தல் நாடகம். தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த பல வருடங்களாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படு கொ லை உள்ளிட்ட அத்தனை படு கொ லைகளுக்கும் நீதி விசாரணை வேண்டும்.” – என்றார்.

Thinakaran
406 718.1K
  • Videos
  • Playlists
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 2 days ago
  • சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.!
    சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.! 2 days ago
  • புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்
    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் 3 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      திருகோணமலையில் எனது விவசாயக் காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

      திருகோணமலையில் எனது விவசாயக் காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

      by Mathavi
      May 25, 2025
      0

      அரசாங்கத்திற்கு, இந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஐந்து இலட்சம் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே நாட்டினுடைய நன்மை கருதியும் விவசாயிகளின் நன்மை கருதியும் அரசாங்கம் காணிகளை...

      ஊழலில்லாத அபிவிருத்தி செயற்பாடுகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க உறுதிபூண வேண்டும்.!

      ஊழலில்லாத அபிவிருத்தி செயற்பாடுகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க உறுதிபூண வேண்டும்.!

      by Mathavi
      May 25, 2025
      0

      உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடனான நேரடி சந்திப்பு இன்று(25) அலரிமாளிகையில் நடைபெற்றது. குறித்த சந்திப்பில் ஐனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின்...

      கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

      கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

      by Mathavi
      May 25, 2025
      0

      இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகததாச மைதானத்தில் 24,25ம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சியில் கல்முனை மாநகரசபை தீ...

      கட்டைக்காட்டில் பொதுக் காணி சுவீகரிப்பு – சுமந்திரன் நேரடி விஜயம்.!

      கட்டைக்காட்டில் பொதுக் காணி சுவீகரிப்பு – சுமந்திரன் நேரடி விஜயம்.!

      by Mathavi
      May 25, 2025
      0

      வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் பொதுக் காணி ஒன்றை அத்துமீறி சுவீகரித்துள்ளமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறித்த இடத்தை இன்று(25) நேரடியாக...

      உயிலங்குளம் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

      உயிலங்குளம் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

      by Mathavi
      May 25, 2025
      0

      மன்னார் உயிலங்குளம் 542 படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 542 ஆவது படைப் பிரிவு அதிகாரி மேஜர்...

      வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனை முகாம்.!

      வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனை முகாம்.!

      by Mathavi
      May 25, 2025
      0

      2025.03.28 ஆம் திகதி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இற்கமைய சுவீகரிக்கப்படவுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காக வெற்றிலைக்கேணியில் மக்களுக்கான நீதி அமைப்பினால் சட்ட ஆலோசனை முகாம் இன்று(25)...

      அப்பாவி மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இரு குறுந்திரைப்படங்கள் வெளியீடு.!

      அப்பாவி மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இரு குறுந்திரைப்படங்கள் வெளியீடு.!

      by Mathavi
      May 25, 2025
      0

      திருகோணமலை மாவட்ட மக்களின் நில அபகரிப்புக்களை எடுத்துக் காட்டும் வாழ்வியலுடன் தொடர்புடைய "சம்பூர் மின் உற்பத்தி நிலையம் முதல் சக்தியற்ற வாழ்க்கை" மற்றும் "திரியாயின் ஆத்திக்காடு" என்ற...

      உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் நெருக்கடி.!

      உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் நெருக்கடி.!

      by Mathavi
      May 25, 2025
      0

      உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு...

      வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

      வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

      by Mathavi
      May 25, 2025
      0

      வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை(24) உயிரிழந்துள்ளார். மாவடி சமரபாகுவைச் சேர்ந்த 60 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்....

      Load More
      Next Post
      குளுக்கோமா நோயானது கண்பார்வையை இல்லாது செய்யக்கூடியது – கண் வைத்திய நிபுணர் சந்திரகுமார் எச்சரிக்கை.!

      குளுக்கோமா நோயானது கண்பார்வையை இல்லாது செய்யக்கூடியது - கண் வைத்திய நிபுணர் சந்திரகுமார் எச்சரிக்கை.!

      யாழில் தெருநாய்களை பிடித்து வளர்க்கும் குடும்பம்.!

      யாழில் தெருநாய்களை பிடித்து வளர்க்கும் குடும்பம்.!

      வீதி புனரமைப்பு பணிக்கான ஆரம்ப நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

      வீதி புனரமைப்பு பணிக்கான ஆரம்ப நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி