• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

குமுழமுனை மகா வித்தியாலயத்தில் காலநிலை மாற்ற விழிப்புணர்வு அமர்வு.!

Mathavi by Mathavi
February 22, 2025
in இலங்கை செய்திகள், முல்லைதீவு செய்திகள்
0 0
0
குமுழமுனை மகா வித்தியாலயத்தில் காலநிலை மாற்ற விழிப்புணர்வு அமர்வு.!
Share on FacebookShare on Twitter

தூய்மையான இலங்கை செயற்பாட்டின் முன்மாதிரி திட்டத்தின் தேசியக் கருத்தின் கீழ், காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு கற்பிப்பதில், குமுழமுனை மகா வித்தியாலயம் முக்கியமான முன்னேற்பாட்டை எடுத்துள்ளது. பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளின்படி, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு நேற்றையதினம் (21.02.2025) மாணவர்களின் மனதில் சுற்றுச்சூழல் மாற்றங்களைப் பற்றிய அறிவையும் பொறுப்புணர்வையும் விதைப்பதற்காக விழிப்புணர்வு அமர்வொன்றை ஏற்பாடு செய்தது.

குமுழமுனை மகா வித்தியாலயம், தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் அறிமுகமாகும் முன்னரே, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவித்து வந்த ஒரு பாடசாலையாகும்.

சுற்றுச்சூழல் நலனுக்காக பாடசாலையின் தொடர்ச்சியான முயற்சிகள், இப்பாடசாலையை ஒரு முன்மாதிரி கல்வி நிறுவனமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றியுள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த ஒழுக்கத்துடன் மற்றும் உற்சாகத்துடன் அமர்வில் கலந்துகொண்டு, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

விழிப்புணர்வு மற்றும் அறிவு பரிமாற்றம் நிகழ்ச்சியின் போது, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் சி.கோகுலராஜா கலந்து கொண்டு, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாற்றங்கள், குறைப்பு நடவடிக்கைகள், மற்றும் மாணவர்களின் பொறுப்பான பங்குபற்றல் குறித்து மதிப்புமிக்க தகவல்களை பகிர்ந்துகொண்டார். மேலும், காலநிலை மாற்ற விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு துண்டுப் பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், சுனாமி, வெள்ளம், சூறாவளி, இடிமின்னல், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் பற்றிய புத்தகங்கள் பாடசாலை நூலகத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப்பணிப்பாளரால் வழங்கப்பட்டன.

முதலுதவி குறித்த புத்தகமும் வழங்கப்பட்டது. இப்புத்தகங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசர சூழ்நிலைகளில் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் திறனை பெறும் வகையில் உதவியாக அமைந்தது.

குமுழமுனை மகா வித்தியாலயத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஒரு குழு செயற்பட்டு வருவதுடன், அவர்கள் தற்போதை காலநிலை மாற்றத்திற்கேற்ப பொறுப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.

இவ்விழிப்புணர்வின் பின் முதன்மையான செயற்திட்டமாக, மாணவர்களின் வீடுகளில் இருந்து மின்சார கட்டண விவரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் மின் உபயோகத்தை குறைக்கும் முயற்சியில் மாணவர்களை சுற்றுச்சூழல் குழு ஈடுபடுத்தவுள்ளது.

மேலும், பாடசாலையில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட கழிவு முகாமைத்துவ திட்டத்தையும், சுற்றுச்சூழல் குழு மேம்படுத்த உள்ளதோடு, மாணவர்கள் பொறுப்புணர்வுடன் கழிவுகளை நிர்வகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சாரணர் குழுவின் சமூக சேவை குமுழமுனை மகா வித்தியாலயத்தின் சாரணர் குழு, சமூக பொறுப்புணர்வை முன்னிறுத்தும் வகையில், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு சிரமதானப் பணியை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம், தூய்மையான இலங்கை திட்டத்தின் நோக்குகளுக்கு துணைபுரிவதுடன், மாணவர்களுக்கு சமூக சேவை, ஒழுக்கம், குழுப் பணியாற்றும் திறன், மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் முக்கிய வாய்ப்பாக அமைகிறது.

பாடசாலைகளுக்கான முன்மாதிரி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதில் குமுழமுனை மகா வித்தியாலயத்தின் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியவை.

மாவட்டம் சார்பாக, பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏனைய பாடசாலைகளும் குமுழமுனை மகா வித்தியாலயத்தின் முன்மாதிரியை பின்பற்றி, இதேபோன்ற சுற்றுச்சூழல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் மாணவர்களிடையே தலைமைத்துவம், ஒழுக்கம், மற்றும் பொறுப்புணர்வை வளர்ப்பதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு அக்கறை கொண்ட ஒரு புதிய தலைமுறையை உருவாக்க முடியும்.
தூய்மையான இலங்கை திட்டத்தில் பாடசாலைகள் எப்படி ஒரு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக, குமுழமுனை மகா வித்தியாலயத்தின் இந்த முயற்சி விளங்குகின்றது.

Thinakaran
410 722.4K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 2 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

      இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

      by Thamil
      May 29, 2025
      0

      தினகரன் ஊடாக உதவி கோரியிருந்த இராசரத்தினம் தர்சினி என்பவர் சிறுநீரக செயலிழப்பினால் உயிரிழந்துள்ளார். இவரின் சிகிச்சைக்காக உதவி செய்த அனைவருக்கும் இதனை அறியத் தருகின்றோம். இவரின் ஆத்மா...

      யாழில் திடீரென உயிரிழந்த ஆண் ; உடற்கூற்று பரிசோதனைகளில் வெளியான தகவல்..!

      யாழில் திடீரென உயிரிழந்த ஆண் ; உடற்கூற்று பரிசோதனைகளில் வெளியான தகவல்..!

      by Thamil
      May 29, 2025
      0

      யாழில் இன்றைய தினம் (29) ஆண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) எனாபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

      யாழில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு..!

      யாழில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு..!

      by Thamil
      May 29, 2025
      0

      யாழில் இன்றைய தினம் (29) குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி, 3 ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த இரத்தினம்...

      பொகவந்தலாவயில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்பு..!

      பொகவந்தலாவயில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்பு..!

      by Thamil
      May 29, 2025
      0

      பொகவந்தலாவ - டியன்சின் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவருடைய மரணம் தொடர்பாக பலத்த சந்தேகம் நிகழ்வதாக தெரிய வருகிறது....

      யாழில் பென்ட்ரைவினை இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் கைது..!

      யாழில் பென்ட்ரைவினை இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் கைது..!

      by Thamil
      May 29, 2025
      0

      யாழில் பென்ட்ரைவினை (Pendrive) இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் ஒருவர் இன்றைய தினம் (29) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அத்தியடி ஜே/78 கிராம சேவகராக கடமை...

      600 ரூபா செலவிற்கு 60,000 ரூபா பத்திரத்தில் கையொப்பமிட வற்புறுத்திய NPP இணைப்பாளர்..!

      600 ரூபா செலவிற்கு 60,000 ரூபா பத்திரத்தில் கையொப்பமிட வற்புறுத்திய NPP இணைப்பாளர்..!

      by Thamil
      May 29, 2025
      0

      யாழ் வடமராட்சிக் கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மீது தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி வேட்பாளர்கள் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தி...

      இலங்கை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ; பொது மக்கள் பாதிப்பு..!

      இலங்கை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ; பொது மக்கள் பாதிப்பு..!

      by Thamil
      May 29, 2025
      0

      இலங்கை வங்கி மன்னார் கிளை ஊழியர்கள் இன்றைய தினம் (29) வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் அடையாள தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். அரச...

      வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில் பண்பாட்டு பெருவிழா..!

      வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில் பண்பாட்டு பெருவிழா..!

      by Thamil
      May 29, 2025
      0

      வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு பெருவிழா இன்று (29.05) பாடாசாலை அதிபர் சு.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து...

      அரச பேருந்து சாரதிக்கு சட்ட நடவடிக்கை ; மோட்டர் போக்குவரத்து திணைக்களம் அதிரடி..!

      அரச பேருந்து சாரதிக்கு சட்ட நடவடிக்கை ; மோட்டர் போக்குவரத்து திணைக்களம் அதிரடி..!

      by Thamil
      May 29, 2025
      0

      போக்குவரத்து குறைபாடுகளை கொண்ட அரச பேருந்து ஒன்றின் சாரதியின் அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பத்து நாட்களுக்குள் பேருந்தை சீரமைக்காவிடில் பேருந்திற்கு நிரந்தர தடை உத்தரவு வழங்கப்படும்...

      Load More
      Next Post
      யாழில் மனைவி அதிக கடன் பெற்ற விரக்தியில் கணவன் உயிர்மாய்ப்பு.!

      யாழில் மனைவி அதிக கடன் பெற்ற விரக்தியில் கணவன் உயிர்மாய்ப்பு.!

      யாழில் பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் கைது.!

      யாழில் பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் கைது.!

      கொ லைக் கலாச்சாரத்துக்கு உடனே முடிவு கட்டுங்கள் – அரசிடம் சஜித் கோரிக்கை.!

      கொ லைக் கலாச்சாரத்துக்கு உடனே முடிவு கட்டுங்கள் - அரசிடம் சஜித் கோரிக்கை.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி