ஆத்தல் எடுக்க வனப்பகுதிக்கு சென்றவர்கள் ஹட்டன் நீதிமன்றத்தில் தண்டம் செலுத்தினர்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து வந்த எட்டு பேரை கடந்த மாதம் சாமிமலை கவரவில்லை தொடர் வனப் பகுதியில் வைத்து நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் கைது செய்து ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதன் பின்னர் பிணையில் சென்ற குறித்த எட்டுப் பேருக்கு இன்றைய தினம் 21.02.2025 வழக்கு இடம்பெற்றது. இதன்போது நான்கு குற்றவாளிகளுக்கு தலா 20000/= வீதம் தண்டப்பணம் அறவிடபட்டது. அத்துடன் ஏனைய மூன்று பேரையும் அரச செலவு காட்டுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
ஒரு சந்தேக நபர் நீதிமன்றங்களுக்கு ஆஜராகவில்லை என்று நல்லதண்ணி வனத்துறை அதிகாரி ரத்நாயக்க தெரிவித்தார்.