• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 25, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மக்களின் வாழ்வியலை பாதிக்கும் கனிய மணல் அகழ்வை அனுமதிக்க முடியாது.!

Mathavi by Mathavi
February 15, 2025
in இலங்கை செய்திகள், மன்னார் செய்திகள்
0 0
0
மக்களின் வாழ்வியலை பாதிக்கும் கனிய மணல் அகழ்வை அனுமதிக்க முடியாது.!
Share on FacebookShare on Twitter

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலும், எதிர்கால நலனையும் பாதிக்கின்ற கனிய மணல் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது எனவும் கனிய மணல் அகழ்வுக்கு சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க முன்னெடுக்கவுள்ள கள விஜயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை(15) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

மன்னார் தீவில் மூன்று திட்டங்கள் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் சூழ்நிலையில் அதானியுடைய காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி நிறுவனம் பின் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அரசாங்கம் எதிர்வரும் வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிகிறோம்.

மின்சாரத்தை கொள்வனவு செய்வதில் விலை நிர்ணயத்தில் ஏற்பட்ட முரண்பாடு, அத்திட்டத்தை மீளாய்வு செய்ய அரசு குழு ஒன்றை நியமித்திருந்த சூழ்நிலையிலே அதானி குழுவினரால் இவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முழுமையாக இத்திட்டத்தில் இருந்து அவர்கள் வெளியேறுவார்களா? அல்லது எதிர்வரும் வாரம் இடம்பெற உள்ள பேச்சு வார்த்தையுடன் அவர்கள் மீண்டும் இணங்கி போவார்களா? என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

எனவே மன்னார் தீவில் அவர்கள் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அமுல்ப்படுத்தக் கூடாது என்பதே எமது தொடர்ச்சியாக கோரிக்கையும், ஜனநாயக போராட்டமுமாக அமைந்துள்ளது.

மக்களின் அடிப்படை இருப்பையும், உணர்வையும் புரிந்து கொண்டு அவர்கள் மன்னார் தீவில் இருந்து வெளியேற வேண்டும். அவர்கள் வெளியேறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

கனிய மணல் அகழ்வு தொடர்பாக தெரிவிக்கையில்,

மேலும் இரண்டு தடவைகள் கனிய மணல் அகழ்வு குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் கள விஜயத்தை மேற்கொண்டு கனிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க கள விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்திருந்த போது மக்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த இரு தடவைகள் அவர்களினால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

அவர்கள் மீண்டும் கள விஜயத்தை மேற்கொள்ள பாதுகாப்பு கோரியுள்ளனர். அத்துடன் நீதிமன்றத்தின் ஊடாக அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம்.

திங்கட்கிழமை அவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு புதன்கிழமை மன்னாரிற்கு 23 திணைக்களங்களும் வந்து கள ஆய்வு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிகின்றோம். எனவே கனிய மணல் அகழ்வுக்கான கள ஆய்வில் ஈடுபட அவர்கள் வருகை தரக் கூடாது. மக்களின் விருப்பம் இன்றி அவர்கள் குறித்த நடவடிக்கையை முன்னெடுக்க கூடாது.

மன்னாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மழை விட்டும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு விதமான சுற்றுச்சூழல் தாக்கத்தையும் சமூக இருப்புக்கான கேள்விக் குறியையும், மக்கள் வாழ்விடங்களில் இருக்க முடியாத ஒரு நிலைப்பாடும் காணப்படுகின்றமையினால் இந்த பகுதியில் மண் அகழ்வு செய்யக் கூடாது என்கிற மக்களினுடைய போராட்டத்தை மதித்து அவர்களுடைய உணர்வுகளுக்கு செவி சாய்த்து இத் திட்டத்தில் இருந்து அவர்களும் வெளியேற வேண்டும்.

இவ்வாறு இன்றி அடாத்தாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அவர்கள் வருவர்களாக இருந்தால் மன்னார் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு எதிராக மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய ஜனநாயகப் போராட்டத்தை மக்கள் முன்னெடுப்பார்கள்.

எனவே அரசு இந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இத்திட்டங்களில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டும். மேலும் கரையேற மணல் அகழ்வு செயற்திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும்.

இந்த மூன்று திட்டங்களையும் மன்னார் தீவு பகுதியில் இருந்து அவர்கள் கைவிட்டு வெளியேறி மக்களின் வாழ்வியல் இருப்புக்கும், வாழ்வியல் சுகாதார சுற்றுச் சூழல் பாதிப்புக்களின் இருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ளும் நிலைப்பாட்டிற்கு அரசு சாதகமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என மன்னார் மக்கள் சார்பில் நாங்கள் இந்த கோரிக்கையை விடுக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார், மீனவ சங்க பிரதி நிதி என்.எம்.ஆலம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

Thinakaran
406 718.1K
  • Videos
  • Playlists
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 1 day ago
  • சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.!
    சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.! 2 days ago
  • புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்
    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் 2 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      திருகோணமலையில் எனது விவசாயக் காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

      திருகோணமலையில் எனது விவசாயக் காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

      by Mathavi
      May 25, 2025
      0

      அரசாங்கத்திற்கு, இந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஐந்து இலட்சம் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே நாட்டினுடைய நன்மை கருதியும் விவசாயிகளின் நன்மை கருதியும் அரசாங்கம் காணிகளை...

      ஊழலில்லாத அபிவிருத்தி செயற்பாடுகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க உறுதிபூண வேண்டும்.!

      ஊழலில்லாத அபிவிருத்தி செயற்பாடுகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க உறுதிபூண வேண்டும்.!

      by Mathavi
      May 25, 2025
      0

      உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடனான நேரடி சந்திப்பு இன்று(25) அலரிமாளிகையில் நடைபெற்றது. குறித்த சந்திப்பில் ஐனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின்...

      கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

      கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

      by Mathavi
      May 25, 2025
      0

      இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகததாச மைதானத்தில் 24,25ம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சியில் கல்முனை மாநகரசபை தீ...

      கட்டைக்காட்டில் பொதுக் காணி சுவீகரிப்பு – சுமந்திரன் நேரடி விஜயம்.!

      கட்டைக்காட்டில் பொதுக் காணி சுவீகரிப்பு – சுமந்திரன் நேரடி விஜயம்.!

      by Mathavi
      May 25, 2025
      0

      வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் பொதுக் காணி ஒன்றை அத்துமீறி சுவீகரித்துள்ளமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறித்த இடத்தை இன்று(25) நேரடியாக...

      உயிலங்குளம் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

      உயிலங்குளம் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

      by Mathavi
      May 25, 2025
      0

      மன்னார் உயிலங்குளம் 542 படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 542 ஆவது படைப் பிரிவு அதிகாரி மேஜர்...

      வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனை முகாம்.!

      வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனை முகாம்.!

      by Mathavi
      May 25, 2025
      0

      2025.03.28 ஆம் திகதி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இற்கமைய சுவீகரிக்கப்படவுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காக வெற்றிலைக்கேணியில் மக்களுக்கான நீதி அமைப்பினால் சட்ட ஆலோசனை முகாம் இன்று(25)...

      அப்பாவி மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இரு குறுந்திரைப்படங்கள் வெளியீடு.!

      அப்பாவி மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இரு குறுந்திரைப்படங்கள் வெளியீடு.!

      by Mathavi
      May 25, 2025
      0

      திருகோணமலை மாவட்ட மக்களின் நில அபகரிப்புக்களை எடுத்துக் காட்டும் வாழ்வியலுடன் தொடர்புடைய "சம்பூர் மின் உற்பத்தி நிலையம் முதல் சக்தியற்ற வாழ்க்கை" மற்றும் "திரியாயின் ஆத்திக்காடு" என்ற...

      உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் நெருக்கடி.!

      உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் நெருக்கடி.!

      by Mathavi
      May 25, 2025
      0

      உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு...

      வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

      வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

      by Mathavi
      May 25, 2025
      0

      வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை(24) உயிரிழந்துள்ளார். மாவடி சமரபாகுவைச் சேர்ந்த 60 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்....

      Load More
      Next Post
      நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து!

      நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து!

      மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு பாதிப்பு – நா.வர்ணகுலசிங்கம்.!

      மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு பாதிப்பு - நா.வர்ணகுலசிங்கம்.!

      யாழ்ப்பாணம் வந்த பிரதமர் பல நிகழ்வுகளில் பங்கேற்பு.! (சிறப்பு இணைப்பு)

      யாழ்ப்பாணம் வந்த பிரதமர் பல நிகழ்வுகளில் பங்கேற்பு.! (சிறப்பு இணைப்பு)

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி