• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 26, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்களே எல்லை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள்.!

Mathavi by Mathavi
January 31, 2025
in இலங்கை செய்திகள், மன்னார் செய்திகள்
0 0
0
இந்திய மீனவர்களே எல்லை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள்.!
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையாக உறுதுணையாக இருப்போம் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் நூர் மொஹமட் ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (31) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

இந்திய மீனவர்கள் கடந்த வாரம் இலங்கை கடற்பரப்பில் நுழைந்த போது ஏற்பட்ட அசம்பாவிதத்தை இந்திய தரப்பு பூதாகாரமான விடயமாக மாற்றியுள்ளனர். அதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அவர்களின் வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்துள்ளது.

நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். இந்திய மீனவர்களை அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைய வேண்டாம். அவர்கள் நுழைகின்ற சமயத்தில் இலங்கை கடற்படை அவர்களை கட்டுப்படுத்த அசமந்தப் போக்குடன் நடந்து கொண்டு இருக்கிறது. இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்தையும் நாங்கள் விமர்சித்து குறை கூறி வருகிறோம்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற நாட்களில் இலங்கை மீனவர்கள் குறிப்பாக வட பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை அந்த மீனவர்களுக்கு ஏற்படுகின்ற சொத்து இழப்புக்களை கணக்கிட்டு பார்த்தால் சுமார் 700 மில்லியன் ரூபாய் சொத்துக்களை வடபகுதி கடலில் இழந்திருக்கிறோம். இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கையினால் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் இவ்வளவு நாசமாகியுள்ளது.

இந்த விடயங்கள் அனைத்தும் இந்திய தரப்பிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் ஆதார பூர்வமாக கூறுகின்றோம். எனவே இந்திய மீனவர்கள் உள்நுழைவதை தடுப்பதற்கு நாங்கள் அரசுக்கு விடுக்கின்ற கோரிக்கைகள் அல்லது அழுத்தங்கள் காரணமாக கடற்படையினர் இலங்கை கடல் எல்லையில் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.

எனினும் இலங்கை எல்லையில் இன்றி எமது கரையோர பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இந்திய மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய தரப்பினரால் கூறப்படுகின்ற விடயங்களை சகித்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது.

வெறுமனே இலங்கை கடற்படை, வட பகுதி மீனவர்கள், இலங்கை அரசின் மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். குறித்த துன்பியல் சம்பவமானது இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகில் கடற்படை வீரர் ஒருவர் பாய்ந்து படகை நிறுத்தக் கோரிய போது குறித்த கடற்படை வீரரை கடத்த முயன்ற போது குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. மீனவர்களின் படகில் 5 முதல் 8 மீனவர்கள் மாத்திரம் கடலில் பயணிப்பதை நாம் பார்க்கின்றோம். ஆனால் குறித்த படகில் 13 பேர் வரை பயணித்துள்ளனர்.

ஒரு படகில் 13 பேர் பயணிக்க இந்திய தரப்பு எவ்வாறு அனுமதி வழங்கியது? பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிச் சிட்டை வழங்குகின்றனர். இந்த நிலையில் இவர்கள் அனைவரும் ஒரு படகில் எவ்வாறு பயணித்தார்கள்?

இந்திய கடல் எல்லையை தாண்டக்கூடாது என்கின்ற நிபந்தனையும் குறித்த சிட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையிலே குறித்த நிபந்தனைகளையும் மீறி அவர்கள் வருகின்றனர். எனினும் அவ்வாறு வருகின்றவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டு,மீ ண்டும் விடுவிக்கப்படுகின்றனர். இந்த நிலையிலே அவர்கள் தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான மீனவர்கள் மீது இந்திய தரப்பு இதுவரை என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது?.

இந்தியா ஒரு வல்லரசு நாடு என்று கூறிக்கொண்டு, சந்திர மண்டலத்திற்கும், செவ்வாய்க்கிரகத்திற்கும் ஆய்வுக்காக அனுப்புகின்றனர். எனினும் தங்கள் நாட்டு மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டுகின்ற போது உயிரிழப்புக்களையும் சந்திக்கின்றார்கள். கடற்படையினரால் கைதும் செய்யப்படுகின்றனர். எனினும் இலங்கை அரசாங்கத்திடம் எவ்வித தொழில்நுட்பமும் இல்லை. எனவே இந்தியாவினால் இயலாதா? தமது நாட்டின் எல்லையை பாதுகாக்க? தமது நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுகின்றார்கள் என கூறும் இந்திய அரசு தமது மீனவர்களை பாதுகாக்க அவர்களே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமது நாட்டு எல்லையையும் பாதுகாக்க வேண்டும்.

ஏன் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டிற்கு இந்திய அரசு வருகின்றது இல்லை. இலங்கையில் தனது ஆதிக்கத்தை காண்பிக்கவே இந்தியா இவ்வாறு செயல்படுகின்றது. இதனை வட பகுதி மீனவர்களும் இலங்கை மக்களும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையாக உறுதுணையாக இருப்போம். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதை தடுப்பதற்கு கடற்படைக்கும் இலங்கை அரசுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம். இந்திய தரப்பிற்கு ஒரு செய்தியை கூற விரும்புகின்றோம்.

இலங்கை எல்லையை தாண்டி மீன் பிடிக்கவராதீர்கள் இவ்வாறு எல்லையை தாண்டினால் இவ்வாறான துன்பியல் சம்பவம் நடப்பதை தவிர்க்க முடியாது என தெரிவித்தார்.

Mathavi

Mathavi

Related Posts

திருகோணமலையில் எனது விவசாயக் காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் எனது விவசாயக் காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

by Mathavi
May 25, 2025
0

அரசாங்கத்திற்கு, இந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஐந்து இலட்சம் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே நாட்டினுடைய நன்மை கருதியும் விவசாயிகளின் நன்மை கருதியும் அரசாங்கம் காணிகளை...

ஊழலில்லாத அபிவிருத்தி செயற்பாடுகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க உறுதிபூண வேண்டும்.!

ஊழலில்லாத அபிவிருத்தி செயற்பாடுகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க உறுதிபூண வேண்டும்.!

by Mathavi
May 25, 2025
0

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடனான நேரடி சந்திப்பு இன்று(25) அலரிமாளிகையில் நடைபெற்றது. குறித்த சந்திப்பில் ஐனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின்...

கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

by Mathavi
May 25, 2025
0

இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகததாச மைதானத்தில் 24,25ம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சியில் கல்முனை மாநகரசபை தீ...

கட்டைக்காட்டில் பொதுக் காணி சுவீகரிப்பு – சுமந்திரன் நேரடி விஜயம்.!

கட்டைக்காட்டில் பொதுக் காணி சுவீகரிப்பு – சுமந்திரன் நேரடி விஜயம்.!

by Mathavi
May 25, 2025
0

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் பொதுக் காணி ஒன்றை அத்துமீறி சுவீகரித்துள்ளமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறித்த இடத்தை இன்று(25) நேரடியாக...

உயிலங்குளம் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

உயிலங்குளம் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

by Mathavi
May 25, 2025
0

மன்னார் உயிலங்குளம் 542 படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 542 ஆவது படைப் பிரிவு அதிகாரி மேஜர்...

வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனை முகாம்.!

வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனை முகாம்.!

by Mathavi
May 25, 2025
0

2025.03.28 ஆம் திகதி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இற்கமைய சுவீகரிக்கப்படவுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காக வெற்றிலைக்கேணியில் மக்களுக்கான நீதி அமைப்பினால் சட்ட ஆலோசனை முகாம் இன்று(25)...

அப்பாவி மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இரு குறுந்திரைப்படங்கள் வெளியீடு.!

அப்பாவி மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இரு குறுந்திரைப்படங்கள் வெளியீடு.!

by Mathavi
May 25, 2025
0

திருகோணமலை மாவட்ட மக்களின் நில அபகரிப்புக்களை எடுத்துக் காட்டும் வாழ்வியலுடன் தொடர்புடைய "சம்பூர் மின் உற்பத்தி நிலையம் முதல் சக்தியற்ற வாழ்க்கை" மற்றும் "திரியாயின் ஆத்திக்காடு" என்ற...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் நெருக்கடி.!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் நெருக்கடி.!

by Mathavi
May 25, 2025
0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு...

வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
May 25, 2025
0

வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை(24) உயிரிழந்துள்ளார். மாவடி சமரபாகுவைச் சேர்ந்த 60 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்....

Load More
Next Post
சிகரம் கல்வி நிறுவனத்தின் கெளரவிப்பு நிகழ்வு.!

சிகரம் கல்வி நிறுவனத்தின் கெளரவிப்பு நிகழ்வு.!

சுன்னாகம் – தாளையடி அரிகரபுத்திர ஐயனார் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்.!

சுன்னாகம் - தாளையடி அரிகரபுத்திர ஐயனார் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்.!

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும்.!

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி