• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!

Mathavi by Mathavi
June 22, 2026
in இலங்கை செய்திகள்.
0
சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசியல் வரலாற்றில் சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை மாதங்களில் ‘கம் உதாவ’ கிராம எழுச்சித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தார். ஒருங்கிணைந்த வீட்டுத்தொகுதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வீடு பெற்றுக் கொடுத்தது மாத்திரமன்றி, குடும்ப அலகை மையப்படுத்திய வருமான உற்பத்தி நலன்புரித் திட்டங்களையும் அவர் அறிமுகப்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு தேர்தல் மேடையில் வாக்குறுதி அளித்தபடி முதற்கட்டமாக ஒரு இலட்சம் வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்ததுடன், அதன் தொடர்ச்சியாக பத்து இலட்சம் மற்றும் பதினைந்து இலட்சம் பங்கேற்பு வீடமைப்பு அபிவிருத்தித் திட்டங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்தார்.

மக்களின் கவனத்தை வேறு பக்கம் திசைதிருப்பாமல் நாட்டுக்கு உண்மையான சேவையைச் செய்ய வேண்டுமானால், சொல்வதைச் செய்யவும், செய்வதைச் சொல்லவும் கூடிய பண்பு வேண்டும். அந்தத் தலைசிறந்த பண்பு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிடம் காணப்பட்டது.

நமது நாட்டு இலவசக் கல்வி முறையில் விஐபி மற்றும் விஐபி அல்லாத பாடசாலைகள் என ஒரு பாரிய பிரிவினையும் ஏற்றத்தாழ்வும் காணப்படுகின்றது. இந்தத் தவறான கல்வி முறைமையை ஒழிப்பதற்காகவே நாம் ‘பிரபஞ்சம்’ திட்டத்தை முன்னெடுத்தோம்.

ஆரம்பத்தில் நாம் ஆங்கில மொழி மூலக் கல்வி பற்றிப் பேசியபோது எங்களைக் கேலி செய்தவர்களால், பொது வெளியில் இன்று சில ஆங்கில வார்த்தைகளைக் கூட சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறுவதைக் காண்கின்றோம். குறையை அடையாளம் கண்டு அதைத் திருத்திக்கொள்ள விரும்பாமை நாட்டின் ஒரு சோகமான நிலைமையாகும்.

சர்வதேச வேலைவாய்ப்புச் சந்தையில் ஆங்கிலக் கல்வி கற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தை ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் அன்றே அறிந்திருந்தார். இன்று டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி பற்றிப் பேசினாலும், கிராமத்துப் பாடசாலைகளுக்கு இதன் பலன்கள் கிடைப்பதில்லை. புதிய தொழில்நுட்பத்துக்குப் பொருத்தமான தொழில்களை நோக்கி நமது நாட்டை நகர்த்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவற்றை நாம் சுட்டிக்காட்டும் போது அரசின் ஆதரவாளர்களால் சமூக ஊடகங்களில் அவை நகைப்புக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருட்களைப் பெற்றுத் தருவோம் என்றும், மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் என்றும் தற்போதைய அரசு பிரஸ்தாபித்தாலும், இன்று வரை அவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தற்போது நாட்டின் பிரதான பொருளாதாரத் தூணாக விளங்கும் ஆடைத் தொழிற்சாலைகள் நட்டம் காரணமாகத் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில், இருக்கின்ற தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, வாழைத்தண்டில் இருந்து ஆடைகளைத் தயாரிக்கும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவோம் என்று இந்த அரசின் பிரதி அமைச்சர் ஒருவர் கூறித் திரிகினறார். விந்தையான இக்கதைகளை விடுத்து, நாட்டில் ஏற்கனவே அமைந்து காணப்படும் பாரம்பரிய ஆடைத் தொழிற்சாலைகளைப் பாதுகாப்பது தற்போதைய அரசின் உடனடிக் கடமையாகும்.” – என்றார்.

Related Posts

ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!

ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!

by Mathavi
June 22, 2026
0

டொலர் வருமானத்தை அதிகரித்து, நாட்டில் பலமானதொரு ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார...

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 22, 2026
0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவர்களுக்கு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள்...

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

by Mathavi
June 22, 2026
0

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாது, நாட்டின் அறிவுசார் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் புத்தகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை அரசு உடனடியாக...

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

by Mathavi
June 22, 2026
0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்தியால் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேலும்...

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!

by Mathavi
June 22, 2026
0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் கலாநிதி பால் கபூர், இன்று திங்கட்கிழமை...

அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!

அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!

by Mathavi
June 22, 2026
0

நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியில் தலையீடு செய்து, தங்களுக்குத் தேவையான முறையில் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்குத் தற்போதைய அரசு மிகக்...

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

by Mathavi
June 22, 2026
0

தமிழ்த் தரப்பு சார்பில் பொதுவாக எவ்வாறானதொரு அரசியல் அமைப்பை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பாக, பரந்துபட்ட மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய ஒரு வரைவைத்...

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

by Mathavi
June 22, 2026
0

தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது முறையான தீர்மானங்களோ அரசால் இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகச்...

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இன்று மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!

by Mathavi
June 22, 2026
0

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சங்கிரில்லா ஹோட்டலில், தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் தங்கியிருந்த 116ஆம் இலக்க அறையில் அவருக்கு முன்னர் தங்கியிருந்தவர்களின் விவரங்கள் மாத்திரம் மறைக்கப்பட்டுள்ளன...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி