• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது.!

Mathavi by Mathavi
June 21, 2026
in இலங்கை செய்திகள்.
0
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது.!
Share on FacebookShare on Twitter

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னமும் அந்தத் துயரமான துன்பத்தில் இருந்து மீளாத மக்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு நஷ்டஈடாக வெறும் பணத்தை வழங்குவதன் மூலமாக இந்த மன உளைச்சலுக்கான தீர்வு ஒருபோதும் கிடைக்காது. பாதிக்கப்பட்ட மக்களின் உளக் காயங்களைத் தீர்க்கக்கூடிய ஒரே மருந்து அன்பு மட்டுமே.” – இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 249 காணாமல்போனவர்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கைகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. இது வெறுமனே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்துக்குக் கிடைத்த தரவு மட்டுமேயாகும். இதற்கு மேலும் பதியப்படாத நபர்களும் இருக்கலாம். எனினும், ஒரு மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது சாதாரணமான விடயம் அல்ல.

இங்கு இருக்கின்ற தாய்மார்கள் இன்னமும் தங்களுடைய பிள்ளைகள் எங்கோ ஓரிடத்தில் உயிரோடு இருக்கின்றார்கள், இரகசியமாக வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தீராத எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.” – என்றார்.

இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டுகையில்,
“எங்களுடைய நாட்டில் நாம் இரண்டு பேரழிவான யுத்தங்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம். 30 வருடத்துக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றிருந்தது. தென்னிலங்கையிலும் கூட கடந்த 1987 – 1989ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். தெற்கிலும் பெற்றோர்கள் இன்னமும் தங்கள் பிள்ளைகளைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்” – என்றார்.

“மக்களுடைய உடல் காயங்களுக்கு எம்மால் மருத்துவம் செய்ய முடியும். ஆனால், அவர்களின் ஆழமான உளக் காயங்களுக்கு மருத்துவம் செய்ய முடியாது. அதற்கு வேறு விதமான மாற்றுத் தீர்வுகளே வழங்கப்பட வேண்டும்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தை ஒரு முதன்மை அபிவிருத்தி மையமாகக் கொண்டு தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது என்று குறிப்பிட்ட அமைச்சர், “உண்மையான நல்லிணக்கத்துடன் இனங்களுக்கு இடையிலே சமத்துவ மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும். இனிமேலும் நாம் தமிழர்கள், சிங்களவர்கள் என்று பிரிந்து சிந்திக்காது, மனிதர்களாகச் சிந்தித்து, ஒரே தாய் மக்கள் என்று கருதும் உன்னதமான நிலைமையை இந்நாட்டில் தோற்றுவிக்க வேண்டும்” – என்றும் தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.

Related Posts

கல்முனை படுகொ*லை நினைவேந்தல் நிகழ்வு.!

கல்முனை படுகொ*லை நினைவேந்தல் நிகழ்வு.!

by Mathavi
June 21, 2026
0

இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு...

இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.!

இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.!

by Mathavi
June 21, 2026
0

கண்டி, குண்டசாலை - வராபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்று (20) சடலமாக...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

மனைவியை கொ*லை செய்த கணவன் கைது.!

by Mathavi
June 21, 2026
0

கணவரால் பெற்றோல் ஊற்றி தீயிட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவரின் சடலம் பிபிலை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 40 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் என...

நயினாதீவு கடலில் உயிரிழந்த அதிபரின் மகன் 9A சித்தி பெற்று சாதனை.!

நயினாதீவு கடலில் உயிரிழந்த அதிபரின் மகன் 9A சித்தி பெற்று சாதனை.!

by Mathavi
June 21, 2026
0

நயினாதீவு கடலில் உயிரிழந்த நயினாதீவு கணேசா மகா வித்தியாலய அதிபர் மயூரனின் மகன் கஜவர்சன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியைப் பெற்றுள்ளார். இவரது தந்தை...

பொதுமன்னிப்பு வழங்கினால் செம்மணி உண்மைகளை கூறுவேன்; உண்மையைக் கூற நினைப்பவர் இவ்வாறு கோருவாரா?

பொதுமன்னிப்பு வழங்கினால் செம்மணி உண்மைகளை கூறுவேன்; உண்மையைக் கூற நினைப்பவர் இவ்வாறு கோருவாரா?

by Mathavi
June 21, 2026
0

"பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தின் பிரதான குற்றவாளியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் நேரில்...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; ஆறு பெண்கள் கைது.!

by Mathavi
June 21, 2026
0

கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு பெண்கள்...

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் உண்மையில் ஓர் அர்த்தமற்ற நாடகமே.!

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் உண்மையில் ஓர் அர்த்தமற்ற நாடகமே.!

by Mathavi
June 21, 2026
0

"சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும் அர்த்தமற்ற ஒன்றாகும். ஒரு முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பிரதானியாக அவர் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கக்கூடாது." -...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது.!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது.!

by Mathavi
June 21, 2026
0

சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வர முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர்,...

தேசிய புத்தாக்க விருதுப் போட்டியில் சாதித்த ‘SLIIT Northern Uni’ மாணவர்கள்.!

தேசிய புத்தாக்க விருதுப் போட்டியில் சாதித்த ‘SLIIT Northern Uni’ மாணவர்கள்.!

by Mathavi
June 21, 2026
0

வருடந்தோறும் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குநர்களையும், புத்தாக்கங்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் புகழ்பெற்ற தேசிய விருதை, SLIIT Northern Uni தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் இம்முறை தமதாக்கிக்...

திடீர் சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

திடீர் சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

by Mathavi
June 21, 2026
0

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் திடீர் சோதனை நடவடிக்கையில் 42 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (19)...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி