ருகிராமில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான மாநிலங்களவை உறுப்பினர், இந்த ஆண்டு ஜனவரி முதல் வைத்தியாசலையில் அனுமதிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
இந்திய ஊடகங்களின்படி, சோனியா காந்தி இன்று (13) காலை குருகிராமில் உள்ள மெடாந்தா – தி மெடிசிட்டி வைத்தியசாலையில் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் மாத தொடக்கத்தில், அவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, புது டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், உடல் முழுவதும் பரவியிருந்த நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது, அதற்காக அவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ஓரிரு நாட்கள் வைத்தியசாலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்பு, அவர் வழக்கமான பரிசோதனைக்காக சர் கங்கா ராம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மார்பு நோய் நிபுணரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
சோனியா காந்திக்கு நாள்பட்ட இருமல் பிரச்சினை உள்ளது, குறிப்பாக நகரத்தில் நிலவும் இந்த மாசுபாட்டின் காரணமாக அவர் தொடர்ந்து பரிசோதனைகளுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று வைத்தியசாலை வட்டாரம் கூறியுள்ளது. சோனியா காந்தி 2025 டிசம்பரில் தனது 79-வது பிறந்தநாளைக் கொண்டாடியமையும் குறிப்பிடத்தக்கது.










