யாழில் நேற்றையதினம் கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றையதினம் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார்.
பின்னர் அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
Related Posts
சுகாதாரத்துக்கு முறைகேடான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றல்.!
களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் பழுதடைந்த நிலையிலும் உரிய வெப்பநிலை கையாளப்படாத சுகாதாரத்துக்கு முறைகேடான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவை உணவகங்களுக்கு...
வட்டுக்கோட்டை முதலியகோவில் பகுதியில் வாள்வெட்டு – பெண்ணின் விரல் துண்டானது!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவரின் இரண்டு விரல்கள் துண்டாகின. இது குறித்து மேலும் தெரியவருகையில், ஏற்கனவே அயல் வீட்டு...
வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை!
வடக்கில் உள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள் என...
இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது!
இணையத்தளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு...
வீட்டுக் கட்சியின் மே தின கூட்டத்தில் மான் கட்சியின் தவிசாளர்!
இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டமானது நேற்றையதினம் மாங்குளம் பகுதியில் நடைபெற்றது.குறித்த கூட்டம் தொடர்பாக பல விமர்சனங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் மக்கள்...
யாழில் 8 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியவருக்கு விளக்கமறியல்!
யாழில் எட்டு வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 15.05.2026வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த...
ஒக்ரோபர் 10 -18 வரை ரொரண்டோவில் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு”
"செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்" எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு ஒன்று எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகமுதல் 18 ஆம் திகதி...
புரோட்லென் நீர் தேக்க த்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.
பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள பல்லேவத்த பிட்டவளை பகுதியைச் சேர்ந்த 59 வயது உடைய அனுர பிரியந்த என்ற மன நோயாளி ஒருவர் இன்று காலை 11...
கோணேஸ்வரர் ஆலய புனித நிலங்களை மீட்க சட்டப் போராட்டம்!
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள புனித நிலப்பகுதிகள் ஆலயத்துக்கே சொந்தமானவை என உறுதிப்படுத்தக் கோரி, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 29ஆம் திகதி வழக்குத்...
மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் மரணம்!
புத்தளம் - திருகோணமலை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் - திருகோணமலை பிரதான வீதியின் 134...










