கொட்டகலை கொமர்சல் பகுதியில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கும் இடையில் நேற்று (13) மாலை சுமார் 2.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கையில்,
தனியார் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி கடுமையாக காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியில் சென்ற மேலும் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், மேபீல்ட் பகுதியில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்த சிறிய ரக தனியார் பேருந்து ஒன்று, கொட்டகலை இருந்து ஹட்டன் நோக்கி சென்ற முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பேருந்தின் தடை (பிரேக்) இயங்காமையே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










