நெஸ்டமோல்ட் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் ஆரோக்கிய ஓட்ட நிகழ்வு எதிர்வரும் பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் தொடங்க உள்ளது.உடற்பயிற்சி, தினசரி இயக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆரோக்கியத்தை விரும்பும் மக்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
முதல் முறையாக ஓட்டத்தில் பங்கேற்கும் நபர்கள் மற்றும் வழக்கமாக ஓட்டங்களில் ஈடுபடுவோர் அனைவரையும் கருத்தில் கொண்டு, 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் பிரிவுகளில் ஓட்டம் நடைபெற உள்ளது.உடற்பயிற்சி, தினசரி இயக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆரோக்கியத்தை விரும்பும் மக்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
முதல் முறையாக ஓட்டத்தில் பங்கேற்கும் நபர்கள் மற்றும் வழக்கமாக ஓட்டங்களில் ஈடுபடுவோர் அனைவரையும் கருத்தில் கொண்டு, 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் பிரிவுகளில் ஓட்டம் நடைபெற உள்ளது.வெறும் ஓட்டப்போட்டி மட்டுமின்றி, தினசரி உடல் பயிற்சிகளின் முக்கியத்துவம் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கத்தையும் இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது.ஏற்கனவே ஆரோக்கிய வாழ்வை விரும்பும் பொதுமக்களிடையே இந்த ஓட்டம் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.










