“நாட்டின் சட்டத்தை மதித்துச் செயற்பட வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு உள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதற்கு ஷிரந்தி ராஜபக்ஷ இரு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் கூறியவை வருமாறு:-
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரே ஷிரந்தி ராஜபக்ஷ. அவர் இந்நாட்டில் முதல் பெண்மணியாக இருந்தவர். சிறார் பாடசாலையை வழிநடத்துபவர்.
எனவே, உரிய வகையில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. அவர் சட்டத்தை மதித்துச் செயற்பட வேண்டும்.” – என்றார்.
Related Posts
கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்.!
சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை தோட்ட பி பிரிவில் கடந்த 22 ஆம் திகதி வீட்டார் மஸ்கெலியா கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வழிபட சென்ற வேளையில் கவரவலை ஏ...
சங்கு கலைக்கழகத்தின் ‘அக்கினிக் குஞ்சு’ நாடக ஆற்றுகை ஒரு பார்வை.!
மலையக மக்களின் வாழ்வியல், கலாச்சாரம் மற்றும் அவர்களின் இருப்புக்கான போராட்டங்களை நவீன அழகியலோடு மேடையேற்றும் ஒரு உன்னத முயற்சியாக, சங்கு கலைக்கழகத்தின் தயாரிப்பில் உருவான ‘அக்கினிக்குஞ்சு’ மேடை...
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது.!
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகொட பகுதியில், நேற்று திங்கட்கிழமை (25) இரவு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 02 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர்...
பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க சஜித்தும் நாமலும் பகற்கனவு.!
நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என எதிர்க்கட்சித் தலைவர்...
சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு வழக்குகளின் தீர்ப்புகளையும் ஜூன்...
தமிழர்கள் தங்களது போராட்டத் தலைவர்களை நினைவுகூரக் கூடாது என்று கருதுகின்றது அரசு.!
"தங்களுக்கும் தங்களது போராட்டத்துக்கும் தலைமை தாங்கிய விடுதலை வீரர்களை தமிழ் மக்கள் நினைவுகூரக் கூடாது என அரசாங்கம் சிந்திக்கின்றது. அது சரியானது அல்ல. ஆனால் அவ்வாறுதான் ஆளுந்தரப்பு...
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
ரூபாய் பத்தாயிரம் தருவதாகக் கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகரை கல்முனை நீதிவான் நீதிமன்று 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்...
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்.!
மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நேற்று (25) மாலை படகில் கடத்த வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 இலட்சம்...
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியத் தூதுவருடன் நாமல் எம்.பி. கலந்தாய்வு.!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை நேற்று நேரில் சந்தித்து, இலங்கையின் தற்போதைய நிலைமை...
பணி முடிந்து வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்.!
அனுராதபுரம், மதவாச்சிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை காட்டு யானை ஒன்று திடீரெனத் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...










