• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வட மாகாண ஆளுநர் தலைமையிலான குழு விஜயம்.!

Mathavi by Mathavi
October 8, 2025
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள்
0
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வட மாகாண ஆளுநர் தலைமையிலான குழு விஜயம்.!
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தலைமையிலான விசேட குழுவினர் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இன்றைய தினம் புதன்கிழமை (8) காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்ட வைத்திய பரிசோதனை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து விசேட கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர், உதவி பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டதோடு, வடமாகாண ஆளுநருடன் வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடமாகாண கட்டிடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதன்போது வைத்தியசாலையில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களால் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

குறிப்பாக தேவைகள் மற்றும் வைத்தியசாலையில் உள்ள அதிகமான கட்டிடங்கள் பழமை வாய்ந்த கட்டிடங்களாக உள்ளமையினால் அவற்றை மாற்றி அமைத்தல், மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல், உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

மேலும், நோயாளிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள், அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது இந்திய அரசின் நிதி உதவியுடன் வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள கட்டிடம் குறித்தும் ஆளுநர் வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.

மேலும் மாகாண நிதியில் இருந்து திட்டம் ஒன்றை வகுத்து 2026 ஆம் ஆண்டுக்கான நிதியில் இருந்து 3 மாடி கட்டிடம் ஒன்றை அமைக்க நிதி ஒதுக்கவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் அடுத்த வருட நிதியில் இருந்து சீ.டி.ஸ்கேன் இயந்திரம் ஒன்றையும், மேலும் சில உபகரணங்களையும் கொள்வனவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், வைத்தியர்களுக்கான விடுதி, வைத்தியசாலைக்கான ஆளணி உள்ளிட்ட சில பிரச்சினைகள் குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

மேலும் மன்னாரில் காற்றாலை செயல்திட்டம் குறித்து ஆளுநரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு அவர் பதிலளிக்கையில்,

காற்றாலை விடயம் பேசி தீர்க்கப்பட வேண்டும். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்று கலந்துரையாடப்பட வேண்டும்.

எங்களுக்கு என்ன தேவை உள்ளது என்பது குறித்து கலந்துரையாட முடியும். எனவே கலந்துரையாடல் மூலம் இப்பிரச்சினைக்கான முடிவை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

பாசையூரில் காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்.!

பாசையூரில் காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்.!

by Mathavi
May 26, 2026
0

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பாசையூரில் வாழ்ந்துவரும் மக்களுக்கு அவர்களது காணிகளுக்கான உரித்து ஆவணங்கள் வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கான...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.!

by Mathavi
May 26, 2026
0

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்றையதினம் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கானது எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் 734 பேர் சிக்கினார்கள்.!

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஆறு பேர் கைது.!

by Mathavi
May 26, 2026
0

அரநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோராகம்மன பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 37 முதல் 62 வயதுக்கு இடைப்பட்ட...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
May 26, 2026
0

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் சிறிய ரக பாரவூர்தி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) நேருக்கு...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை.!

நீரில் மூழ்கி ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 26, 2026
0

கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிந்த கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் படல்கும்பர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆசிரியர் என தெரியவந்துள்ளது....

சிறப்பாக இடம்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா.!

சிறப்பாக இடம்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா.!

by Mathavi
May 26, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, மக்கள் வெள்ளத்தில் மிகச் சிறப்பாக பக்திப்...

கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்.!

கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்.!

by Mathavi
May 26, 2026
0

சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை தோட்ட பி பிரிவில் கடந்த 22 ஆம் திகதி வீட்டார் மஸ்கெலியா கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வழிபட சென்ற வேளையில் கவரவலை ஏ...

சங்கு கலைக்கழகத்தின் ‘அக்கினிக் குஞ்சு’ நாடக ஆற்றுகை ஒரு பார்வை.!

சங்கு கலைக்கழகத்தின் ‘அக்கினிக் குஞ்சு’ நாடக ஆற்றுகை ஒரு பார்வை.!

by Mathavi
May 26, 2026
0

மலையக மக்களின் வாழ்வியல், கலாச்சாரம் மற்றும் அவர்களின் இருப்புக்கான போராட்டங்களை நவீன அழகியலோடு மேடையேற்றும் ஒரு உன்னத முயற்சியாக, சங்கு கலைக்கழகத்தின் தயாரிப்பில் உருவான ‘அக்கினிக்குஞ்சு’ மேடை...

சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் சிக்கினார்.!

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 26, 2026
0

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகொட பகுதியில், நேற்று திங்கட்கிழமை (25) இரவு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 02 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர்...

பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க சஜித்தும் நாமலும் பகற்கனவு.!

பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க சஜித்தும் நாமலும் பகற்கனவு.!

by Mathavi
May 26, 2026
0

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என எதிர்க்கட்சித் தலைவர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி