பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை எதிர்வரும் 6 அல்லது 7 ஆம் திகதி பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் இப்பிரேரணையானது எதிர்வரும் 6 ஆம் அல்லது 7 ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமாத்திரமன்றி இப்பிரேரணையை தாம் முற்றாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தாலும், அப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பை கோராதிருக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் விதமாக பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்பிரேரணை தொடர்பில் கடந்த மாத நடுப்பகுதியில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர், தமது மாற்று அபிப்பிராயங்களை முன்வைத்திருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட பிரேரணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது.
அதன்படி இத்திருத்தப் பிரேரணையில் மோதல்கள் என்ற சொல்லின் ஊடாக இனப்பிரச்சினை எனும் சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருப்பதுடன் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்யேக நீதித்துறை பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இப்பிரேரணையானது எதிர்வரும் 6 ஆம் அல்லது 7 ஆம் திகதி பேரவையில் சமர்ப்பட்டு நிறைவேற்றப்படும் என உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமாத்திரமன்றி இப்பிரேரணையை தாம் முற்றாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தாலும், அப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பை கோராதிருக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.










