யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைக்காக நேற்று யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பொலிஸார் அவரை உடனடியாக மீட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த நபர் எச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்டார் என்பது தொடர்பில் இதுவரை தகவல் வெளிவரவில்லை.
Related Posts
மண்மேட்டிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!
நாவலப்பிட்டிய, பெனிதுடுமுல்ல பகுதியில் நேற்று (18) திங்கட்கிழமை மண்மேடு ஒன்றிலிருந்து கீழே தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பெனிதுடுமுல்ல பகுதியைச் சேர்ந்த 58...
அரச வாடி வீட்டில் வெடிப்புச் சம்பவம்.!
கெகிராவ வாடி வீட்டின் சமையலறைக்குள் இன்று (19) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் அங்கிருந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்து தம்புள்ளை ஆதார...
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
கடவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல பியன்வில பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பேலியகொட பகுதியைச்...
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!
கொழும்பில் இன்று 19 ஆம் திகதி பிற்பகல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ...
இலங்கை ஊடகவியலாளர் தேசமாணி இர்ஷாத் ரஹ்மத்துல்லாவுக்கு தமிழகத்தின் தங்க மகன் விருது.!
தமிழ் கலை மற்றும் பண்பாடு மற்றும் தமிழ் ஊடகத் துறைக்கு சிறப்பான பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டி இலங்கையினை சேர்ந்த ஊடகவியலாளர் தேசமாணி இர்ஷாத் ரஹ்மத்துல்லாவுக்கு...
18ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீர்வு திட்டத்தை முன்னெடுக்கும் ஆண்டாக உலகுக்கு சொல்ல வேண்டும்.!
18ஆவது முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாண்டாவது ஒரு சடங்காக இல்லாமல் விடியலுக்கான ஒரு தீர்வு திட்டத்தை முன்னெடுக்கின்ற ஆண்டாக இந்த உலகிற்கு சொல்ல வேண்டும் என தென்னிந்திய பிரபல...
அறிவொளி வாசிப்புத்திறன் போட்டி ஆரம்பம்.!
வாசிப்பு மேம்பாட்டை உயர்த்தும் நோக்கில், நாவல் நகர் கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் ‘அறிவொளி வாசிப்புத்திறன் போட்டி’ இன்று இனிதே ஆரம்பமானது. இப்போட்டிகள் இந்த வாரம் முழுவதும்...
விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் மீது சட்ட நடவடிக்கை.!
கொழும்பில் இன்று (18) போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகைக்கு இடையூறு விளைவித்ததற்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் மீது சட்ட...
மல்வானை வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க பிரதமர் சம்மதம்.!
பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததால் மல்வானை வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பசில் ராஜபக்சவிற்கு சொந்தமானது எனக் கருதப்படும் மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை...
பிரதமர் ஹரிணி இங்கிலாந்துக்கு விஜயம்.!
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமருடன்...










