இன்று (12) டுபாய் சர்வதேச மைதானத்தில் ஆரம்பாகும் போட்டியில் ஓமானுக்கு எதிரான ஆட்டத்துடன் பாகிஸ்தான் அணியானது 2025 ஆசியக் கிண்ணத் தொடரை தொடங்கவுள்ளது.
இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகும்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நடப்பு சம்பியனான இந்தியாவுக்கு எதிரான அவர்களின் உயர்மட்ட போட்டிக்கு இந்தப் போட்டி மிக முக்கியமான ஆயதமாக அமைகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அண்மையில் நடைபெற்ற டி20 முத்தரப்புத் தொடரை வென்றதன் மூலம், சல்மான்
தலைமையிலான பாகிஸ்தான் அணி வலுவான உத்வேகத்துடன் தொடரில் நுழைந்துள்ளது.
முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது.
அதேநேரம், ஓமனுக்கு இந்தப் போட்டி ஒரு மைல்கல் சந்தர்ப்பமாகும்.
ஏனெனில் அவர்கள் முதல் முறையாக ஆசியக் கிண்ணத்தில் பங்கேற்கிறார்கள்.
எனவே, இந்தப் போட்டி அவர்களுக்கு ஒரு பெரிய பந்தயத்தில் தங்கள் திறனை வெளிப்படுத்த ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.
ஜதீந்தர் சிங் தலைமையிலான அணி, அனுபவத்தில் இடைவெளி இருந்தபோதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நம்பிக்கையுடன் உறுதியுடனும் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு இந்த ஆட்டத்தில் முயற்சிக்கும்.










